ரைஸ் வாளி சவாலுக்கு ஐ.நா.விருது

ரைஸ் வாளி சவாலை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் விடுதலை

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயை, திங்கட்கிழமை (01) மாலை விடுதலை செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர். (more…)
Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் படம்பிடித்தவர் எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் நின்றவர்களை அலைபேசியில் படம் பிடித்த நபர், யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜாவால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது. (more…)

ஆலயத்தில் அநாகரிகமாக நடந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட பெண்னொருவர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர். (more…)

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் யாழ்.றோட்டறிக் கழகம்

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. (more…)

முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய கடற்படை பேரூந்து

கடற்படையினருடைய பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

தொண்டைமானாறு மண்பாதை திறப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன்கருதி வலி.கிழக்குப் பிரதேச சபையால் 4 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக மண்பாதை திங்கட்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

குடும்பஸ்தரை காணவில்லை

வரணி பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் ஜெயரஞ்சன் (வயது 31) என்ற குடும்பஸ்தரை காணவில்லையென அவரது மனைவி, நேற்று திங்கட்கிழமை (01) கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். (more…)

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு

கொழும்பு-3, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 60 வயதான ஒருவர் தனக்கு தானே தீ வைத்துகொண்டதாகவும் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான அவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜெயக்குமாரி சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவை இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது. (more…)

அமைச்சரின் உரையை தடுத்தார் ஜனாதிபதி

பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தாக்குதல் உரையை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இடையில் தடுத்து அவருக்கு அறிவுரை வழங்கிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

இந்திய மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவில் கைது

அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

ஜப்பான் மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதை சொன்ன மோடி!

ஜப்பானிய பள்ளிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லி அசத்தினார். (more…)

புலிகள் மீது சர்வதேச விசாரணையா? : சங்கரி விசனம்

இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது (more…)

அரிசி விலை காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் வர்த்தக நிலையங்களில் அரிசிகளின் விலை காட்சிப்படுத்தப்படவேண்டும் என யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி வசந்த சேகரம் தெரிவித்துள்ளார். (more…)

புதிய ஆணையாளர் பக்கச்சார்பற்ற விதத்தில் நடந்துகொள்வாராம்! – ஹெகலிய

ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கரிசனைகளை புதிய ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கருத்திலெடுத்து பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கூட்டமைப்பினரே காரணம் – டக்ளஸ்

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே காரணம் என (more…)

புதிய தாதியர்கள் நியமனம்

சுகாதார அமைச்சினால் வடமாகாணத்தில் 92 புதிய தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமாகாணத்தில் கடமையாற்றிய 46 தாதியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக (more…)

கட்டுப்பாட்டு விலையில் இருந்து சிறிய லாபத்துடன் அரிசி விற்பனை

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்வது தொடர்பாக வர்தக சங்கப் பிரதிநிதிகள், வர்தகர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. (more…)

தமிழர் நலனில் அக்கறை கொண்டு அரசும், மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்படுங்கள் – யாழ் ஆயர்

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts