Ad Widget

முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய கடற்படை பேரூந்து

கடற்படையினருடைய பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கே. கே. எஸ் வீதியால் யாழ். நகர் நோக்கி வந்து கொண்டிருந்த கடற்படையினருக்கு சொந்தமான பேரூந்து ஸ்ரான்லி வீதியில் இருந்து மானிப்பாய் நோக்கி செல்லவிருந்த முச்சக்கர வண்டியை யாழ். முட்டாசுக்கடை சாந்தியில் மோதியுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக காயங்கள் ஏதும் இன்றி தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ் நகர் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts