Ad Widget

இந்திய மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவில் கைது

அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து மீன்பிடிப்பதற்கு என நேற்று 2 படகுகளில் வந்த 9மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று காலை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது யாழ். மாவட்ட நீரியல் வள துறை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என்.கனேசமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, 2 படகுகளில் ஒரு படகு நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதிலிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts