ஆஸ்கர் விருது: சிறந்த நடிகராக எடி ரெட்மேன் ; சிறந்த நடிகையாக ஜூலியானே மூரே தேர்வு

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் திரையுலகில், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து திரைநட்சத்திரங்கள் அங்கு குழுமியிருந்தனர். தி கிராண்ட் புத்தா பெஸ்ட் ஓட்டல் என்ற திரைப்படம்,...

பல்கலை போராட்டத்துக்கு சைவ மகா சபை ஆதரவு!

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சைவ மகா சபை பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் இழப்புகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பது அவசியம் என்று தெரிவித்த மேற்படி சபை காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதி...
Ad Widget

வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க தமிழ் சிவில் சமூக அமைப்பு தீர்மானம்!

யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

தேசிய அரசாங்கத்தை அமைக்க சு.க பச்சைகொடி

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசே தலைமையில் கடந்த 21, 22 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு புல் மூன்...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி கைது!

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி நேற்று(22) பிற்பகல் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான கடவுச் சீட்டை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் நேற்று பிற்பகல் மாலம்பேயிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி பொலிஸ் சிரேஷ்ட அத்தியகட்சரும் பொலிஸ் ஊடகப்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கும் செல்ல ஆர்வம்!

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புராதன தலைநகரான அநுராதபுரத்துக்கும் விஜயம் செய்யலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் அடுத்த நாளான 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் பிரதமரின்...

கொழும்பு சென்ற பேருந்து மீது தாக்குதல் , ஒருவர் காயம்

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...

கர்ப்பிணிப் பெண்களே அவதானம்!

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர் ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார். நோர்வே - ஒஸ்லோ பல்கலைக்கழகம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 48,000 தாய்மார்களிடம்...

கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது அதாவது 26ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைக்கவுள்ளார். அன்று காலை 11 மணிக்கு மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக்கூடத்தை திறந்துவைக்கவுள்ளதுடன்...

கடற்படையின் தடுப்பில் தற்போது எவரும் இல்லை! திருமலையில் கோட்டா முகாமும் இல்லையாம்!!

திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் எவரும் தற்போது இல்லை என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். திருகோணமலையில் 'கோட்டா' தடுப்பு முகாமில் 700 பேர் வரையிலும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் 35 குடும்பங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் புதிய அரசு உடன் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இலங்கையில் இரண்டு தேசங்கள் உள்ளன

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓர் இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாடு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில்...

‘இலங்கை தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை’

இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டு வந்தாலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையென மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின், 'ஜெனீவாத் தீர்மானமும் மெய்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு' என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை...

வாள்வெட்டில் குடும்பஸ்தர் மரணம்; சந்தேக நபர் பொலிஸில் சரண்

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது, இருவருக்கும்...

மகிந்தவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசனை – இ.போ.ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு...

குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் தேவை – ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியாவின் சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் கூறியுள்ளார். சிட்னியில் கடந்த டிசம்பரில் ஆயுததாரி ஒருவர் பணயம் வைத்திருந்த இருவரை கொன்ற சம்பவத்தின் பின்னணியிலேயே பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது. இரானிலிருந்து வந்து குடியேறியிருந்த- குறித்த இஸ்லாமியவாத ஆயுததாரி ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த...

போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள் – மன்னார் ஆயர்

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின்...

‘இனச்சுத்திகரிப்பு’: தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது....

சிவா படம், அஜீத்துக்கு இரண்டு வேடங்கள்?

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு இரு வேடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வீரம் படம் அஜீத்தின் நகர்ப்புற படங்களிலிருந்து வித்தியாசமாக அமைந்தது. அஜீத்தால் இனி கிராமத்து கதையில் நடிக்க முடியுமா? அப்படியே நடித்தாலும் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்விகளுக்கு வீரம் நேர்மறையான பதிலாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியில், அப்போதே மீண்டும்...

இந்தியாவில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல் நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாத மத்தியிலிருந்து 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரத்திற்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது இந்நோயால் பதினோராயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கான மருந்துகளை விநியோகிப்பதற்கு...

மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யாராய்?

இந்திய சினிமாவையே புரட்டி போட்ட படம் எந்திரன். 2010ல் வெளியான இப்படத்தின் வசூல் இந்தியளவில் தற்போதும் டாப் 10ல் தான் இருக்கிறது. ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதிலும் ரஜினியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா...
Loading posts...

All posts loaded

No more posts