Ad Widget

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கும் செல்ல ஆர்வம்!

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புராதன தலைநகரான அநுராதபுரத்துக்கும் விஜயம் செய்யலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

modi

எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் அடுத்த நாளான 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன் பிரதமரின் பயணம் செய்யும் ஒழுங்குகளை மேற்கொள்ளும் குழுவினர் அநுராதபுரத்துக்கான விஜயத்துக்குமம் நேரம் ஒதுக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றனர். ஏனெனில் இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரம் அரசியல் செல்வாக்கான நகரம் மட்டுமன்றி புராதன பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்டதொரு நகரமாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts