Ad Widget

மஹிந்த, நாமல் உருவம் பொறிக்கப்பட்ட ஒருதொகை கடிகாரங்கள் மீட்பு

சபுகஸ்கந்தை - மாபிம பிரதேசத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மஹர நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, சபுகஸ்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை...

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவும் – விநாயகமூர்த்தி

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை கொழும்பில் சனிக்கிழமை (17) சந்தித்து கலந்துரையாடும் போதே, விநாயகமூர்த்தி இந்தக்...
Ad Widget

வில்லியர்ஸின் விளாசல்

6 பந்துகளில் அரைச்சதம், 31 பந்துகளில் சதம் என, ஒரே நாளில் அனைத்து சாதனைகளையும் தென்னாபிரிக்கா அணியின் ஏபி டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜொகேனர்ஸ் பேர்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே டி வில்லியர்ஸ் இந்த சாதனைகளைப் படைத்தார். இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டு இலங்கையின்...

ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு: பிரதமர் ரணில்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.அது இலங்கைக் கெதிரான விசாரணையல்ல குற்றமிழைத்த தனிப்பட்ட நபர்களுக்கெதிரானது என்றார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல்...

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை...

விக்னேஸ்வரன் புதிய ஜனாதிபதியை சந்திக்கலாம்?

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வடமாகாண அபிவிருத்தி சம்பந்தமாகவோ அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவோ புதிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் அவரை வடமாகாண முதல்வர் உத்தியோகபூர்வமாக சந்தித்து உரையாடவுள்ளாரா என கேட்ட போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை

வடமாகாண பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு புதிய ஆளுநரான எச்.எம்.ஜீ.எஸ்.பளிக்ஹக்காரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், சனிக்கிழமை (17) தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில், பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். அத்துடன் பாடசாலை நடைபெறும் காலங்களில் ஆசிரியர்கள்,...

நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் – வேல்முருகன் தங்கராசா

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கடந்த காலங்களில் இருந்த சிலர், நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் தங்கராசா, சனிக்கிழமை (17) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு...

வடக்கு, கிழக்குக்கு சில பொருட்களை எடுத்துச்செல்லத் தடை !!

வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு...

யாழ்-கொழும்பு பஸில் தீ

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே இந்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 36 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும்...

டக்ளஸின் இடத்திற்கு விஜயகலா!

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...

கிழக்கு மாகாண ஆட்சி ! மு.காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

புதிய ஆளுநரின் செயற்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் – சிவஞானம்

வடக்கு மாகாணத்திற்கு இராணுவ பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரின் எதிர்காலச் செயற்பாடுகள் மாகாணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனூடாக மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி மாகாண சபையையும் சிறந்த முறையில் இயங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் வட மாகாண...

யாழ். வர்த்தக சங்கம், அரசாங்கத்திடம் 5 கோரிக்கைகளை முன்வைத்தது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்திடம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கைக்கு வரமுடியால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், இலங்கைக்கு வந்து செல்வதற்கான அனுமதி உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைப்பதாக யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்தார். யாழ். வர்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்...

சட்டத்தரணி வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த மர்மகும்பல்

பருத்தித்துறை நீதிமன்ற சட்டத்தரணி திருமதி உருத்திரேஸ்வரன் விஜயராணி என்பவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (16) இரவு 8 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று வாள்களுடன் நுழைந்து அட்டகாசம் புரிய முயற்சித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அந்தக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். பருத்தித்துறை வல்லிபுரம் பரியாரி ஒழுங்கையில் அமைந்துள்ள சட்டத்தரணியின் வீட்டுக்குள் வாள்களுடன்...

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் எமது இடங்களை தொலைத்தோம்

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் 'கண்ணடிக்கும்காலம்', 'இரண்டாவது உயிர்' எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில்...

நொர்தேன் பவர் நிறுவனத்துக்கு இடைக்கால தடை?

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படும் இலங்கை மின்சார சபையின் நொர்தேன் பவர் நிறுவனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தல் தொடர்பான கட்டளையை உருவாக்குதல் தொடர்பில், எதிர்வரும் 27ஆம் திகதி கூறப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், கூறினார். கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்படுவது குறித்து பாதிக்கப்பட்ட 11...

றக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலைக்கு சீல்

றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சிய சாலைக்கு பாதுகாப்பு அமைச்சினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள குறித்த களஞ்சியசாலையானது,...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்திகள் கூ.சங்கம் போர்க்கொடி

யாழ்.மாவட்ட பராவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி நிதியத்திற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். கடந்த காலத்தில் மணல் ஏற்றிப் பறிப்பதற்காக வைப்புப் பணமாக ஒவ்வொரு லொறி உரிமையாளரும் ஒரு பாரவூர்திக்கு ஐயாயிரம் ரூபா வைப்புச் செய்ய வேண்டும் என்றும் அந்த பணத்தைப் வைப்புச் செய்யும் பாரவூர்த்திக்கே மணல ஏற்றிப்...

யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இடங்களும் கூட அதிகரித்துள்ளன. கடந்த 14 நாள்களில் 6 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறு தொடரும்...
Loading posts...

All posts loaded

No more posts