Ad Widget

எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் திருநாளாகத் தைப்பொங்கல் இம்முறை புலர்ந்துள்ளது

நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகாரபீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய ஆட்சி சிம்மாசனம் ஏறியுள்ளது. அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்துக்குத் தமிழ் மக்களாகிய நாமும் கரங்கொடுத்தோம். அந்த வகையில் எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் நாளாகத் தைப்பொங்கல்...

இந்திய அரசின் உயர் கல்வி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இளமாணி ,முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் இந்தியாவில் தொடர்வதற்காக, கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கையைச்சேர்ந்த 180 பேருக்கு உயர்கல்வி புலமைபரிசில்களை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்காக இவை வழங்கப்படுகின்றன.இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சின் ஊடாகவே பயனாளர் தெரிவுகள் இடம்பெறும். இலங்கை அரசின்...
Ad Widget

பாப்பரசரைத் தரிசிக்க மடுவில் இலட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பு!

இலங்கைக்கு இரு நாட்கள் திருயாத்திரை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார். பாப்பரசரிடம் ஆசி பெற இலட்சக்கணக்கான மக்கள் மடுத் திருத்தலத்தில் காத்திருக்கின்றனர். இதேவேளை மடுப் பிரதேசத்தில் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து விமானப் படையின்...

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 இல்! – நிதி அமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் நிதி அமைச்சக வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன்...

தெல்லிப்பழை மகாஜனா, யூனியன் கல்லூரிகளின் கிணறுகளில் எண்ணெய்க் கசிவு

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு இருப்பதாக சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, மாணவர்களுக்கான குடிநீருக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இரு கல்லூரிகளின் அதிபர்களும் தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் க.ரட்ணகுமார், 'கடந்த 6ஆம் திகதி சுகாதார பரிசோதகர்களால் எமது பாடசாலை...

காலி முகத்திடலிலிருந்து… (நேரலை)

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ் பிரசன்னத்தில், காலி முகத்திடலில் நடைபெறும் விசேட ஆராதனை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு...

திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ரூபா கொள்ளை?

´திவிநெகும´ வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மீளப் பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வௌியிடப்பட்டுள்ளது. திவிநெகும...

மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் திரைப்பட இயக்குநர் ஒருவருடையதாம்!

நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிட்கப்பட்ட இருவர் மாத்திரம் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானம் ஒரு திரைப்பட இயக்குநர் ஒருவருக்குச் சொந்தமானதென தெரியவந்துள்ளது. விமானம் மீட்கப்பட்ட பின், குறித்த திரைப்பட இயக்குநர் மீட்கப்பட்டது தன்னுடைய விமானம் என ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும்...

பாரிஸ் தாக்குதல்களில் பலியானோருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி

பாரிசிஸ் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிசில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பிறகு முதல் முறையாகக் கூடிய அந்நாட்டின் தேசிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 17 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் பிரெஞ்சு தேசிய...

காக்கி சட்டையில் விறைப்பாக தோன்றும் விருமாண்டி அன்னலட்சுமி

விருமாண்டியில் நடித்த பிறகு காணாமல் போன அபிராமியை கமல்தான் விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச மீண்டும் அழைத்து வந்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸ் அபிராமிக்கு செமையாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. மலையாளத்தில் சுரேஷ்கோபியின் மனைவியாக அப்போதகரே படத்தில் நடித்தவர் தற்போது மலையாள ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவின்...

பறக்கும் விமானத்தில் திரிஷா திருமணம்?

திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்த வருண்மணியனை மணக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதனை திரிஷாவே டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததுக்கு அழைக்கப்பட உள்ளனர். 25-ந்தேதி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு திரிஷாவும் வருண்மணியனும் இணைந்து பிரத்யேக...

காணாமல்போனோரின் உறவுகள் பாப்பரசரைத் தரிசிக்க மடு நோக்கி பயணம்

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து விளக்குவதற்காக உறவுகள் மடு நோக்கிப் பயணமாகினர். காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எந்தப் பதிலும் இல்லாது, அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா...

ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்களை மீளப்பெறப் பணிப்பு!

ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை வெளியாட்கள் பயன்படுத்திவருகின்றமை குறித்து வெளியான தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக மீளப்பெறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த மற்றும் சகோதரர்களுக்கு எதிராக ஜே.வி.பி. முறைப்பாடு!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்...

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (13) மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய், சுதுமலையைச் சேர்ந்த மகாராசா துஷாந்தன் (வயது 20), ஸ்ரீகரன் ஸ்ரீசங்கர் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு...

தனியாருக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

புனித பாப்பரசர் பிரான்சிஸின் வருகையையொட்டி நாளை புதன்கிழமை(14) பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த விடுமுறையை தனியார் ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில் ஆணையாளர் ஹேரத் யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

அமலன் கொலை வழக்கு மேல்நீதிமன்றுக்கு

சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் கொலை வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் படி மேலதிக விசாரணைக்காக நேற்று யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. பொன் அணிகளின் போர் கிரிக்கெட் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இவர் துடுப்பாட்ட...

மகிந்தவின் தோல்விக்கு அவரது சோதிடர் கூறும் காரணம்!!

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்துங்கள் என்று கூறியதுடன் தேர்தல் நாளை குறித்து கொடுத்தும் மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தது,...

வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் கடந்த 2014 வருடத்தில் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் ரீ.விஸ்பரூபன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான சமூக, கலாச்சார சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாது இளைஞர்கள் தவறான வழியில் செல்வதனால் அவர்களுக்குரிய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்றது....

ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை – மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அவதானித்த பின் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியானதை அடுத்து அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Loading posts...

All posts loaded

No more posts