- Friday
- May 17th, 2024
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், நாடு திரும்புவது குறித்த பேச்சு இருநாட்டு பிரிதிநிதிகளுக்குமிடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வந்த சமயம் இது குறித்து பேசப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார். அகதிகளுக்கான ஐ.நா. மன்றம், ஐரோப்பிய...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்கஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு, இன்னும் 1,425 இலட்சம் ரூபாய் வழங்கவேண்டியுள்ளது என உள்ளக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை...
வீட்டுத்திட்டம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக கோரி உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட J/208 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டுள்ளனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றதுடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என்று கோரி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அளுத்கடை, உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பிரதம நீதியரசருக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை இராணுவமும் அதனுடன் சேர்ந்த இராணுவ அனுசரணைச் சக்திகளும் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் யாழ்ப்பாணத்தின் பிற பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெடுந்தீவு மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு,...
வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜனின் தந்தை இராமநாதன், அவரது உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டார். அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டிலேயே...
நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக வீதியை ஆக்கிரமித்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெடுந்தீவு பிரதேச மக்களை சந்திப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர்களான இ.ஆனோல்ட், பா.கஜதீபன், அனந்தி சசிதரன், அ.பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம் கே.சயந்தன்...
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர். கல்கிஸை, கலாபுர பகுதியில் மூடப்பட்டிருந்த கட்டிடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குடைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வருகிறார். அவர் இந்தப் பயணத்தின்போது யாழ்ப்பாணத்துக்கும் சென்று தற்போதுள்ள நிலை குறித்து ஆராய்வார் என்று கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் இவரது வருகை அமைந்துள்ளது. இலங்கைவரும் அமைச்சர் இங்கு, அரச தரப்பை சந்தித்து பல்வேறு...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. தெல்லிப்பழை, நாவற்குழி, சண்டிலிப்பாய், மயிலிட்டி, வரணி, கெருடாவில், கோண்டாவில், மானிப்பாய் ஆகிய 8 பிரதேசங்களில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களுக்கு இந்த...
யாழ்ப்பாணம் வல்லிக்குறிஞ்சி முராலி பிள்ளையார் கோவிலுக்கு அருகில், தலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (27) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலை வடக்கு போதனாமடம் பகுதியை சேர்ந்த சரவணமுத்து சந்திரமோகன் (வயது 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் உழவு இயந்திரத்தின் சில்லின் அடையாளம் காணப்படுவதுடன், சிறிது தூரத்தில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட...
உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பல லட்சம்பேர் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தங்களின் பேஸ் புக் கணக்குகளை தொடர்புகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் இந்த அளவுக்கு செயற்படாத மோசமானதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன்...
இலங்கையில் ஒருபோதும் இராணுவ அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற தான் முயற்சிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகக் கூறியுள்ளார் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள தன்னிலை...
மூன்று வருடங்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று போக்குக் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் இசை வரும் 30 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்புடன் இசைக்கு சூர்யா இசையமைக்கவும் செய்துள்ளார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளருக்கும், வளர்ந்துவிட்ட முதிய இசையமைப்பாளருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை. ரஹ்மான்...
உயர்பாதுகாப்பு வலையமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களுடைய காணிகளில் ஒரு தொகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்.அரசாங்க அதிபராக இருந்து திருமதி இமெல்டா சுகுமார் உச்ச நீதிமன்றத்தில் அனுப்பிவைத்த சிபார்சின் அடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 கிரம சேவகர்...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து, பஸ்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்படும் என்று பொது போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தெரிவித்துள்ளார். இந்த கட்டணங்கள் 8-10 சதவீதத்துக்கு குறைக்கப்படும் என்றும் ஆகக்குறைந்த கட்டணம் 1 ரூபாவால் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மா, சீனி, பால்மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனூடாக அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக்குறைப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்த்தகர்கள் இவ்வகையான உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதை இடை...
இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்கள், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடர்பாடுகளைக் களைந்து அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண...
Loading posts...
All posts loaded
No more posts