Ad Widget

மாணவன் மீது வாள்வெட்டு

மல்லாகம் சந்தி கே.கே.எஸ் வீதியால் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவனை நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், வாளால் வெட்டியதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் மகாவித்தியாலய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்ற மாணவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மல்லாகம் சந்தியில் இரு இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த மாணவன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts