Ad Widget

இனப்படுகொலை குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும்...

ஐ எஸ் பிடியிலிருந்த அமெரிக்கப் பெண்மணி கொலை

சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிசெய்திருக்கிறார். அவர் கடந்த 18 மாதங்களாக அந்தத் தீவிரவாதக் குழுவால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அந்த இருபத்தி ஆறு வயதான தொண்டு நிறுவன ஊழியரது கொலைக்கு காரணமானவர்களை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும்...
Ad Widget

புலி படத்தில் புரட்சி தமிழ்

இளைய தளபதி முதன் முறையாக சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படம் புலி. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார். இதனால், ஸ்ருதி, ஸ்ரீதேவி, ஹன்சிகா ஆகியோர் மிகுந்த பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும், விஜய்யும் முதன் முறையாக சுத்தமான தமிழில் பேசவிருக்கிறாராம்....

முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

என்னை அறிந்தால் கௌதமின் திரைவாழ்க்கையில் நல்ல ஓபனிங்கை மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. கௌதம் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். என்னை அறிந்தால் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கௌதம். அது அவருக்குப் பிடித்துள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் முடிந்ததும்...

நடந்தது பிழையென்ற மனப்பக்குவத்தை எமது சகோதர சிங்கள அரசியல் வாதிகளின் மனதில் விதைக்கவே இதைக் கொண்டு வந்துள்ளேன்.-முதலமைச்சர்

வடமாகாணசபையில் இனப்படுகொலை பிரேரணையை முன் வைத்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய முழுமையான உரை கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே, கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய தரவுகள் தரப்பட்டால் நானே குறித்த இனப்படுகொலை பற்றியதான பிரேரணையைத்...

நீரில் உடனடி எண்ணைப்பரிசோதனைக்கு 1.3 மில்லியன் செலவில் கருவி புலம்பெயர் தமிழர் அனுப்புகின்றனர் – அமைச்சர் ஐங்கரநேரன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது....

நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் பண்ணை சுகாதார கிராமத்திற்கு முன்னால் முன்னெடுத்தனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232 பேர்...

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியானது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது. டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள். இதில் உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட தொகுதிகள் 10 உள்ளன. அதேபோல நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள தொகுதிகள் 28 ஆகும். ஏழைகள்,...

சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலையில் சுவரொட்டி!

இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே' என விளித்து ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் "ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே...

வடக்கு மாகாண சபையில் இனவழிப்புப் பிரேரணை தீர்மானமாகியது!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்தவருடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இன்று அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் தீர்மானமாககியது. வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகக் கட்டட தொகுதியில் நடைபெற்றது. இந்த அமர்வில் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து உரையாற்றினார். சட்டநடைமுறைகளை...

தாமதமாக ஆரம்பமாகிய சபை அமர்வு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வரத் தாமதமாகியதால் வடமாகாண சபை அமர்வு காலை 10.09 மணிக்கே ஆரம்பமாகியது. வழமையாக வடமாகாண சபை அமர்வு 9.30 மணிக்கு ஆரம்பமாகின்ற நிலையில் இன்றைய அமர்வு தாமதமாக ஆரம்பமாகியது. கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகியது. ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த 2014...

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாணசபையின் 24 ஆவது சபை அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் கோமகனின் விடுதலைக்கான மக்கள்...

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக...

தாயின் பூதவுடலை சுமந்து சென்று சுடலையிலும் இறுதிக் கடன்களை நிறைவேற்றிய பெண் பிள்ளைகள்

யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது. திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...

இந்தியர் இருவருக்கு இசையுலகின் பிரபல கிராமி விருது

57 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், இந்தியாவை சேர்ந்த இருவர் இசையுலகின் கவுரவம் மிக்க இவ்விருதினை பெற்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரையுலகம் மற்றும் பாப் இசை உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விருதுக்கான...

அரசியலில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்?

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது....

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்!

90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம்...

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களைப் பதியுமாறு வேண்டுகோள்!

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களையும் பதிவு செய்யும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தமிழ் கைதிகளினதும் விவரங்களை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர்...

அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, திங்கட்கிழமை(09) தெரிவித்தார். யாழ். பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமகனை...

யாழ்.பிரதேச செயலக புதிய கட்டடம் திறந்து வைப்பு

பழைய பூங்கா வளாகத்தில் 48 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. சென்.ஜோன்ஸ் கல்லூரியில் வசதிகள் குன்றிய நிலையில இயங்கி வந்த...
Loading posts...

All posts loaded

No more posts