Ad Widget

முதன்மைச் சுடரை முதலமைச்சர் ஏற்றமாட்டார் – துளசி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் பொது...

யாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு மனவருத்தமளிக்கிறது – முதலமைச்சர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு...
Ad Widget

நினைவேந்தல் நிகழ்வில் முதல்வருடன் இணைய பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கூட்டத்துக்கான பொது அழைப்பை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்தார்....

வட. மாகாண சபையின் அறிவிப்பு வேதனையளிக்கிறது: யாழ். பல்கலை சமூகம்

முள்ளிவாய்க்காலில் நடைபெறும் தமிழர் இனவழிப்பு நினைவுதினத்தை வடக்கு மாகாணசபை தாமே நடத்துவோமென அறிவித்துள்ளமையானது மனவேதனையைத் தருவதாக என யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி...

யாழ். பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை?

யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன....

பல்கலைக்கழக மாணவர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை, அவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைக்கழக...

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரசியலுக்கு இடமில்லை

“முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என்பதுடன், தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதுக்கும் அனுமதிக்க முடியாது” என யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்....

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்!

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது. முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த...

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நினைவாலயம் அமைக்க தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...

தடைகளைத் தாண்டி யாழில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...

முள்ளிவாய்கால் பேரவலத்தினை நினைவுகூர அழைப்பு!

இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை...

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக அச்சுறுத்தப்பட்டால் முறையிடுங்கள்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்...

ஆட்சி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டால் நிரந்தர சமாதானம் கிடைக்கும் : சம்பந்தன்

நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தரமான, சமத்துவம் மிக்க சமாதானம் ஏற்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் யுத்தத்திற்கான காரணம் என்ன? அந்த யுத்தத்தின்...

முள்ளிவாய்க்காலில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இனவழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல்

த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இனவழிப்புநாள் 8ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு நேற்ற காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் இறுதியுத்தம் நடைபெற்ற மாணிக்கபுரம் வாவிக் கரையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். போர்க்காலத்தில் சிறீலங்கா அரசினால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட...

இலங்கையில் உயிழந்தவர்களுக்காக இராமேசுவரம் கடற்கரையில் அஞ்சலி

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும்,...

கடும் நிபந்தனைகளுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி!

சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மாலை அனுஷ்டிக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர்கள் காணப்படக் கூடாது என்ற...

எமது நினைவேந்தல் நிகழ்வு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய...

நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பகுதில் நினைவுக் கற்கள் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டதாக நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நினைவுக்கற்களை...
Loading posts...

All posts loaded

No more posts