Ad Widget

தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும்...

சம்பந்தன் தலைமையில் திருமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை சிவன் ஆலயத்தில் மிக , பக்திபூர்வமாக விசேட பூஜையுடன் ஆரம்பமானது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், முன்னாள்...
Ad Widget

“மே 18 புனிதமான பிரதிபலிப்பு நாள்” சங்காவின் உருக்கமான டுவிட்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு. எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: வட.மாகாணமெங்கும் சோகமயம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் முடங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழமைபோல் செயற்படுகின்றன. அத்துடன், கிளிநொச்சி நகரெங்கும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசமெங்கும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் அறிவிப்பு

முள்ளிவாய்கால் நினைவேந்தலுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்துகள் புறப்படுவதற்கான நேர அட்வணை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் அறிவிக்கப்பட்டள்ளன. அதன் முழு விவரம் வருமாறு,

பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை: ராஜித

வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் உயிரிழந்த...

மே-18 இல் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்து!

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும்...

முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி – பல்கலை. மாணவர்கள் அழைப்பு

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...

இனத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நாளாக மே 18ஆம் திகதி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நிகழ்வினை அனுஷ்டிப்பதில் முரண்பட்ட சில தரப்பினர், அந்நிகழ்வின்...

நான்காம் நாள் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுத்தூபியில்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 1974ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி யாழ் வீரசிங்கம்...

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலத்தின் நினைவாக புத்தக வெளியீடு

முள்ளிவாய்க்கால் நினைவாக, “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” எனும் நூல் யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், கொள்கை ஆய்வுக்கான நிலையமான “அடையாளம்” அமைப்பினது ஏற்பாட்டிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமே கலந்துகொண்டனர் என்பதும் அரசியல் பிரமுகர்கள்...

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தோரை அஞ்சலிக்க வடக்கில் “தீபமேந்திய ஊர்தி”

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” வல்வெட்டித்துறையில் மண்ணிலிருந்து இன்று (15) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. இளைஞர்களால் ஆரம்பிக்கப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைகிறது. தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பொலிஸாரின் லீவுகள் இடைநிறுத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல தர நிலை பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இன்று காலை அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மே...

சாவகச்சேரியில் நினைவுத் தூபி அமைக்க நடவடிக்கை

உள்நாட்டு யுத்தத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக, சாவகச்சேரி பொதுச்சந்தையில் தூபியொன்று கட்டியெழுப்பப்படவுள்ளதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (திங்கட்கிழமை) மாலை சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றபோதே இதனைத் தெரிவித்தார். சாவகச்சேரி நகர சபையின் தலைவர் சிவமங்கை...

மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில், தமிழினம் ஓரணியில் திரள வேண்டும்!!

முள்­ளி­வாய்­க்கால் என்­பது இறு­திப் போரில் பெருந்­தொ­கை­யான தமிழ் உற­வு­கள் அரச படை­க­ளின் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளில் ஈவி­ரக்­க­மின்றிக் கொல்­லப்­பட்ட மண். தமிழ் உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்ட மண். தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­காக எமது உற­வு­கள் தீக்­கு­ளித்த மண். விடு­த­லைக் கன­வு­டன் ஆயி­ர­மா­யி­ரம் வேங்­கை­க­ளும் தமிழ் மக்­க­ளும் தங்­க­ளின் உயிர்களை ஆகு­தி­யாக்­கிய மண். மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில்...

மே 18 தமிழர் தேசத்தின் தேசிய துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும்: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

மே 18 தமிழர் தேசத்தின் தேசிய துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழர் தேசத்தை சிங்களப் பேரினவாதப்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் செம்மணிப் படுகொலை புதைகுழி இடத்தில் இன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது. மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் கடைப்பிடுக்கப்படுகிறது. இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது நாளான இன்று காலை செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....

எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் கண்ணீர் மல்க காக்கா அண்ணா விடுத்துள்ள கோரிக்கை!!

தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பாதீர்கள். எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் எனத் தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று வியாழக்கிழமை(10) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தமிழீழ விடுதலைப் புலிகள்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணிப்போம்: யாழ். மாணவர் ஒன்றியம்

வட. மாகாண சபை தமது கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வை புறக்கணிப்போம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வடக்கு- கிழக்கு தாயக மக்கள்...

இன அழிப்பு நாளாக மே 18 பிரகடனம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம்...
Loading posts...

All posts loaded

No more posts