- Thursday
- March 5th, 2026
சிறீலங்கா இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் ஒன்றிணைவதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன் சிங்கள இராணுவத்துடன் முன்னாள் போராளிகளும் தமிழ் இளைஞர்களும் இணைய முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலின் விளக்கமறியலை எதிர்வரும் யூன் மாதம் 3ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார். கடந்த 8ஆம் திகதி யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ். நகர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட...
வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வு திட்டம் சனிக்கிழமை (21) மாலை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க் கட்சி தலைவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் உட்பட மாகாண...
மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது...
இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா மீட்பு அணிகளையும் உதவிப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தியக் கடற்படையின் கப்பல்களான, ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சுட்லேஜ் ஆகிய கப்பல்களிலும் இந்திய விமானப்படையின் சி-17 போக்குவரத்து விமானத்திலும் இந்தியா உதவிப் பொருட்களையும் மீட்பு அணிகளையும் அனுப்பியுள்ளது. இரண்டு கப்பல்களும் 30 தொடக்கம்...
சிறீலங்காவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைகாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் யப்பான் விமானமொன்று நேற்று இரவு கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கடந்த வெள்ளி இரவு 8.45 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தது. இதில், மக்களுக்கான உடனடித் தேவைகளான போர்வைகள், தண்ணீர்...
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை, கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில்...
கொழும்பில் சிலநாட்களாகத் தொடர்ந்துவந்த சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வானம் சற்று வெளித்திருந்தது. இன்று மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘ரோனு’ சூறாவளி தற்போது காங்கேசன்துறையிலிருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில் அது தற்போது நாட்டைவிட்டு நகர்ந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் தொடர்கின்ற...
தொழிலின் போது கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விவரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டிவருகிறது. கடலில் தொழில் செய்யும்போது உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வடமாகாண கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவுதொகையாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. இதற்கமைய கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுகின்றன. கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்,...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி ஆகியோர் வெசாக் தினத்தை கொண்டாடும் இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யாழ் சிறைச்சாலையில் இருந்து வெசாக் பண்டிகையை முன்னிட்டு எட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி இந்திரகுமார் தெரிவித்துள்ளார். இவர்களை இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலை செய்திருந்தனர். மேலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தாதன் காரணமாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த எட்டு பேரையே இன்றைய தினம் விடுதலை...
உலகில் மிக உயரமான இடமான இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கை பெண்ணாக ஜெயன்தி குருஉதும்பல சாதனை படைத்துள்ளார். இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இமய மலை ஏறிய பெண்ணாக அவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அத்துடன் ஜெயன்தி குருஉதும்பலவுடன் சேர்ந்து இமய மலை எறுவதற்கு...
புனித வெசாக் பண்டிகை தினம் இன்று(21) அனைவராலும் பக்தி பூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும், சாந்தி சமாதானத்துடனும், அனுஷ்டிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெசாக் தின செய்தி.. வெசாக் நிகழ்வினை, புத்த பெருமான் போதித்தவாறு அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி ஆகிய நான்கு பிரம்மங்கள் ஊடாக உத்வேகம் பெறும் நற்குணங்கள் மிகுந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய ஆன்மீக அணுகுமுறையாக மாற்றிக் கொள்வது எமது நோக்கமாகக் காணப்பட வேண்டும். புத்தபெருமான் போதித்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்வதனைப்...
அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகத்தலுக்குமான பொறிமுறை யாழ் மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் எமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ்மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நன்கொடைகளை வழங்க முன்வரும்...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக உயிரிழந்த, பொருட்கள் சேதமடைந்த மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச்...
'குளங்களின் நீர் பற்றாக்குறை தொடர்பாக விவசாய அமைச்சருடனும் மத்திய அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். இக்குளங்களைப் புனரமைத்தல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை ஒன்றாக இணைத்து நீர் மட்டங்களைக் கூட்டுதல், அதன் மூலம் இரண்டு போக பயிர்ச் செய்கைகளுக்கான நீரைத் தேக்கி வைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சிகள் முடிவடைந்ததும் உங்கள் குளங்கள்...
இளவாலையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளதுடன் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் அந்நபரையும் கைதுசெய்துள்ளனர்.
இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘ரோனு’ சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அத்துடன் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80கிலோமீற்றராகக்...
Loading posts...
All posts loaded
No more posts
