- Thursday
- March 5th, 2026
வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் இன்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சில பொறுப்புக்களை முதலமைச்சர் எடுத்து தனக்கு கீழேயும், சில பொறுப்புக்களை வேறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.00...
வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையென மறுதலித்துள்ளார் வடமாகாண ஆளுநர். இதற்கு ஆதாரமாக உரையின் இறுவெட்டினையும் வட மாகாண சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. வட மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கான யோசணையில் சமஸ்டி முறையிலான தீர்வை முன்வைத்து அது பிரேரணையாகவும் ஏற்றுக் கொள்ளப்ப...
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம் வயோதிப்பெண், உணவை...
கந்தரோடைப் பகுதியில் வாள்களுடன் 17 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குழு மோதல் ஒன்றுக்கு தாயாராகவிருந்த போது, இவர்களைப் பொலிஸார் கைதுசெய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
சுன்னாகம் பிரதேசத்தில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே கடவையைக் கடக்க முயன்ற போதே வயோதிபர் மீது ரயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் ஆலடி பகுதியைச் சேர்ந்த சின்னராசா என்ற முதியவரே புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் வரைக்கும் 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் 71 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு...
அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும்...
முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டார புதறிகுடா குளத்திற்கு அருகில் நேற்றுக் காலை 11மணியளவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் பையினுள் இருந்த வங்கி புத்தகத்தின்படி யாழ் நெல்லியடியை சேர்ந்த 74 வயதான TS சிவபாதன் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய...
நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று குறைவடைந்து காணப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று திங்கட்கிழமை மழை பெய்யும்...
சாவகச்சேரி பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள், தற்போது வசிக்கும் வீட்டின் முன்னால் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை வழங்குமாறு பிரதேச செயலகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,வீட்டுத்திட்டப் பணிகளுக்கான பணத்தை வைப்பிலிடுவதற்காக பயனாளிகளின் தேசிய சேமிப்பு வங்கி கணக்கு இலக்கம் போன்றனவற்றை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்....
வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவனை, தொண்டைமானாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வல்வெட்டி மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமார், லண்டனில் இருந்து வந்தவரான சுரேஸ்குமார் மற்றும் மூவர், வல்வெட்டித்துறைப் பொலிசாரால் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார். இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள்...
வவுனியா ஆராச்சிபுரம் பகுதியில் 14 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகப் படுத்திய ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர் , சிறுமியை கைப்பேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக அறியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமைக்கான காரணத்தை விளக்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் சீ.பி.ரட்நாயக்கவின் மகன் அபீத ரட்நாயக்க – திலினி சாபா ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சம்பாஷனையின் போது இந்த விடயத்தை விளக்கியுள்ளார்....
தலைநகர் கொழும்பை மூழ்கடித்துள்ள வெள்ள நீர்மட்டம் குறையாத காரணத்தால் கொழும்பு வெள்ளக்காடாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டு பெரும் அவலத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வெள்ளப்பாதிப்பு இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் கவலையை ஏற்படுத்தும் வகையில் திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேரளவில் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ள நீர்மட்டம்...
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். பேரிடர் நிவாரணங்கள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். பேரிடர் தொடர்பில் நான் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. எனினும் உரிய முறையில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது....
நெடுந்தீவு ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டில் குமுதினி படுகொலை நினைவாக அண்மையில் நெடுந்தீவில் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த குமுதினி படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது 31ஆவது ஆண்டு நினைவையொட்டி...
இந்த மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய காலநிலையின் அடிப்படையில் இந்த மாதம் முழுவதிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இடியுடன் கூடிய மழை பெய்யாவிட்டாலும் ஓரளவு தொடர்ச்சியாக மழை பெய்யும் என...
ஸ்ரீலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கணிப்பிடுவதற்கு 500 கோடி ரூபா செலவில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுள்ள உயர் தொழிநுட்பமிக்க இயந்திரம் செயலிழந்துள்ளதாக வானிலை அவதான நிலைய பணிப்பாளர் லலித் சந்திரபால தெரிவித்தார். காலநிலை நிலைமை குறித்து ஆராய்வதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 500 கோடி ரூபா செலவில் இயந்திரமொன்று கொண்டுவரப்பட்டு கொன்கல மலையில் நிறுவப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
