ஜனாதிபதி‬ வருகையின் போது ‪வலி‬.வடக்கில் மேலதிக ‪‎காணிகள்‬ விடுவிப்பில் ஏந்த ஏற்பாடும் ‪‎இல்லை‬

யாழ்ப்பாணத்துக்கு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் நிலையில் அவரது வருகையின் போது வலி.வடக்கில் மேலதிக காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வமான எந்த நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிலவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்ற அறிவிப்பை யாழ்ப்பாணம் வருகையின் போது ஜனாதிபதி விடுவிப்பார் என...

காளி கோவிலை பிள்ளையார் கோவிலாக மாற்றிய இராணுவம்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வளாகத்தினுள் இராணுவத்தினர் புத்தர் சிலையினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அத்துடன் அங்கு இருந்த காளி கோவிலையும் பிள்ளையார் கோவிலாக மாற்றி உள்ளனர். யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைககளும் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி முதல் உள் நாட்டு யுத்தம் காரணமாக...
Ad Widget

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரை

கல்முனை இஸ்லாமிய பெண்ணின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சின்னலெப்பை அலாவுதீன் என்பவரைக் கொலை செய்ததாக அவரது மனைவி கலந்தர் ரூபியா என்ற பெண்ணுக்கு கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...

‘கிளிநொச்சியில் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் வசித்து வரும் 15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உத்தரவிட்டார். தாய், தந்தை இல்லாத இந்தச் சிறுமி, சிறுவர் இல்லமொன்றில் இருந்து அதன் பின்னர், அம்மம்மா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி இளைஞன்,...

தொலைபேசி பயன்பாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி மட்டுமே கையடக்கத் தொலைபேசியை சரியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்களுக்கு வரும் போது ஒரு சிலருடைய தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது கடினம். ஜனாதிபதி தனது அலுவலகத்துக்கு வந்தவுடன் தனது கையடக்கத் தொலைபேசி நிறுத்தி...

பிரதமரின் சாதகமான பதிலை எதிர்பார்க்கும் முதலமைச்சர்!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தெரிவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதகமான பதில் தருவார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மத்திய...

அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் முடிவு

அஞ்சல் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அஞ்சல் சேவையாளர்களின் தொழிற்சங்க முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பு முறைமை மற்றும் மேலதிக நேர பணிகளுக்கான கொடுப்பனவுகளை மீள வழங்கல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் நடத்தப்பட்டது. பிரதமரின் செயலாளர், அரச நிர்வாக அமைச்சு மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு...

திங்கள் விடுமுறை இல்லை

பொசன் போயா விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை (19ஆம் திகதி) வருகின்றபோதிலும், அதற்கு அடுத்த நாளான 20ஆம் திகதி, விசேட விடுமுறை இல்லை என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை! நீதியைப் பெற்றுத்தருவது ஐ.நாவின் கடமை!! ஆணையாளரிடம் சுமந்திரன் நேரில் வலியுறுத்து !!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு முன்னர் தற்போதைய நிலைமைகள்...

அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தல்!

யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் ஒழிந்து இப்போது அமைதி நிலவுவதாகவும், இந்த அமைதிய சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவ்வாறு அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் புதிதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரானிஸ்லாஸுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில்...

மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு தீர்மானம்

மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலம் திருத்தப்பட்டு பாராளுமன்றத்தில் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். அந்த வகையில் நாட்டில் காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வரி எவ்வாறு என்ன அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து வரைவிலக்கணம் செய்யப்படும் எனவும்...

அத்துமீறிய இந்திய மீனவர்கள் மூவர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு தெற்கே கோவளம் கடற்பரப்பினுள் வைத்து மூன்று இந்திய மீனவர்களை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். காரைநகர் கடற்பரப்பினுள் இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்கள் மூவரையும் கைது செய்ததுடன், கைபற்றப்பட்ட விசைப் படகினை காங்கேசன்துறை...

சிகரட் மற்றும் மதுபானம் மீதான வரி அதிகரிப்பு

சிகரட், மதுபானம் மற்றும் பாம் ஒயில் போன்றவற்றின் வரியை அதிகரிப்பதற்கும், தனியார் சுகாதார சேவை மீதான வெட் வரி வீதத்தை குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். பொருளாதார குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார். அதன்படி குறித்த...

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும்!

இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதி, தென் மாகாணம் மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசலாமென தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நாட்டின் தென்பகுதியில் ஓரளவு மேகக் கூட்டங்களை அவதானிக்க முடியுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது....

யாழ்.நகரில் வாள்வெட்டுக்கு இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் நேற்றுமாலை இளைஞர் ஒருவர் மீது கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இராமசேகர் உசானந்தன் (வயது 19) என்ற இளைஞரே தலையில் படுகாயமடைந்துள்ளார். அரசடி பகுதியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் கற்புலம் பகுதியைச் சேர்ந்த...

 ஈ.பி.டி.பியும் அரசாங்கத்துக்கு ஆதரவு?

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைகளினான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

ரஜினி உடல் நிலை பற்றி வதந்தி பரப்பிய இலங்கை இணையத்தளம் மீது சைபர் க்ரைமில் புகார்

ரஜினி உடல் நிலைப் பற்றி வதந்தி பரப்பிய நபர் மீது நடவடிக்கை கோரி சைபர் க்ரைம் அலுவலகத்தில் இன்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இலங்கையைச் சேர்ந்த தமிழ் இணையதளம் ஒன்று ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியது. இதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்றவற்றில் அந்த வதந்தி தீயாகப் பரவியது. ரஜினி...

இலங்கையில் மீண்டும் பதற்றம்! பற்றி எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான...

மீள்குடியேற்றத்தை தாமதித்தால் போராட்டம் செய்வோம்;வலி வடக்கு மக்கள்

கொஸ்கம சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிவழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 27 வருடங்களாக சொந்த இடத்தில் தங்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயத்தில் மாற்றான் மனப்பான்மையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச மீள் குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி,...
Loading posts...

All posts loaded

No more posts