மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி வேண்டும்!

வவுனியா உக்கிளாங்குளத்தில் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி (வயது - 13) பாலியல் துண்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்றுவரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன என்று தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர் எனவும், விசாரணைகள் பின் செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது...

இந்து சமய அறநெறிக் கல்வி கொடி வாரத்தின் முதாலவது கொடி அமைச்சர் சுவாமிநாதனுக்கு!

இந்து சமய அறநெறிக் கல்வி கொடி வாரத்தை ஆரம்பித்துவைத்து அதன் முதலாவது கொடியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரர் கோவிலில் இடம்பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரனினால் அதன் முதலாவது கொடி அமைச்சர்...
Ad Widget

யாழ் நகர அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்

உலக வங்கியினால் 55 மில்லியன் அமெரிக்க டொலரில் யாழ் நகரை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நகர அபிவிருத்தி திணைக்களத்தினால், அரச மற்றும் பாராளுமன்ற, மாகாண சபை...

வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபு ஊடகவியலாளர்களிடம் கையளிப்பு

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட முன்வரைபு ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபு இன்று செவ்வாய்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு எதிர்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே, ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பில் தெளிவு படுத்தும் வகையில் கையளிக்கப்பட்டுள்ளது.

​வடமாகாண சபையை விமர்சிக்கவில்லை: ஒலிப்பதிவை கேட்டால் உண்மை விளங்கும்! -இறுவட்டுடன் ஆளுனர் முதல்வரிடம் முறைப்பாடு

மாகாண மக்களுக்கும், மாகாண சபைக்கும் ஒத்துழைப்பு வழங்கவே முயற்சிக்கின்றேன். நான் வடமாகாணசபை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கவில்லை. இறுவட்டில் உள்ள ஒலிப்பதிவை கேட்டால் உண்மை விளங்கும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்....

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் விபரம்!!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு தெரியாது) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),...

பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடிகள் அதிகரிப்பு!! கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி...

வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக...

கடமை நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு ஆப்பு

தமது கடமை நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், அரச ஊழியர்கள் தங்கள் கடமை நேரத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கூடுதல் நேரத்தைச் செலவிடுவது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். அண்மையில் தொழிற்சங்கம் ஒன்று...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலம் ஆரம்பம்; வளிமண்டலவியல் திணைக்களம்

ரோணு சூறாவளியின் தாக்கம் குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது,...

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை வெளியீட்டு நிகழ்வு

தென்னிந்திய கலைஞர்கள் பாடிய யாழ்ப்பாணத்தின் இணுவிலில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருவருளை எடுத்துரைக்கும் ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை - 2 இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா தொடங்கும் நாளான எதிர்வரும் சனிக்கிழமை (28.05.2016) இரவு 7:00 மணிக்கு ஆலயத்தின்...

சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றது. நேற்றையதினம் அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது. ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை...

யாழ்ப்பாணத்தைச் சுதந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தில் ஒவ்வொருவருக்கும்...

செனல் 4 காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை!

செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட யுத்தக்குற்ற காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நான்கு காணொளிகளை வெளியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட இக்காணொளிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. எனினும்...

நாளாந்தம் 28 படிகள் ஏறி இறங்கும் சம்பந்தர் ஐயா!!

எதிர்க்கட்சித் தலைவருக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்படுகின்றன.எனினும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லம் பொருத்தமானதல்ல.தற்போது சம்பந்தனுக்கு அடுக்கு மாடி வீடு ஒன்றின் மேல்மாடியே வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடி வீட்டின் படுக்கை அறை மேல்...

நாம் குற்றவாளிகள் அல்லர்; உண்மை ஒரு நாள் வெல்லும்!

"நாங்கள் குற்றவாளிகள் அல்லர். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்."- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். தெஹிவளை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாமல் எம்.பி., பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.)...

யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்!

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலனற்றோரால் முடியாதது என...

மேலும் 3 அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வசம்

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த...

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜூடின் மரணித்த காலப் பகுதியில் கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு மே 17ம் திகதி இடம்பெற்ற தாஜூடினின்...
Loading posts...

All posts loaded

No more posts