சொந்த நிலங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்- வலி.வடக்கு மக்கள்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வலிகாமம் வடக்கு மக்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்த தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பட்டதில் நேற்று வெள்ளிக்கிழமை...

கோட்டாபய, பெசில் ராஜபக்ச ஆகியோரை விசாரணை செய்யவும்; பரணகம

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பெசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம் தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று மெக்ஸ்வல் பரணகம கோரிக்கை விடுத்தார். செய்தி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே காணாமல்போனோர் தொடர்பாக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி...
Ad Widget

மஹிந்த அரசுக்கும் மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை- கோகிலவாணி

நேற்றய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலின்போது...

மாத்தளையில் காணாமல் போன மாணவர்கள் யாழில் பிடிபட்டனர்!

மாத்தளை நாவுல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 மற்றும் 9ம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணாமல் போயுள்ளனர். கடந்த 14ம் திகதி குறித்த இருவரும் காணாமல் போயுள்ள நிலையில் 15ம் திகதி...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சொன்ன விநோத கதை

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், தான் ஏன் கஞ்சா செடியை வளர்த்தேன்? என்பதற்கு விநோதமான காரணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) கூறினார். கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்தனர். மேற்படி நபர் 3...

ஜனாதிபதி, பிரதமரை முகப்புத்தகத்தில் மிரட்டியவர், ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், முகப்புத்தகத்தில் மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகத் குமார லக்மன, தான் மலேஷியாவில் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, மலேஷியாவில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தன்னைக் கைதுசெய்து 5 நாட்கள் தடுத்துவைத்துப் பின்னர் இலங்கைக்கு...

மோட்டார் சைக்கிளை பந்தாடியது பஸ்: மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் பலி

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ்ஸே, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

புலிகள் புதைத்துவைத்திருந்த குண்டுகள் மீட்பு

வன்னி விமானப்படைத்தளத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, வவுனியா பாலம்பிட்டி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருதொகை குண்டுகளை, அப்பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில், புலிகளின் பதுங்குழிகள் இருந்த இடத்திலிருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டன என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர். 74 மிதிவெடிகள், 6 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் மூன்று...

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனந்தி நிவாரண உதவி

மலையக பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நிவாரண உதவிகளை 15.06.2016 அன்று புதன்கிழமை வழங்கி வைத்தார். இதற்கமைய புசல்லாவ பகுதியில் 23 குடும்பங்களுக்கும், தோரகலவில் 33 குடும்பங்களுக்கும், கலத்தவில பகுதியில் 11 குடும்பங்களுக்கும் தேவையான உலர் உணவு மற்றும்...

சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது

தனியார் சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்ட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனை கட்டணங்கள், மருத்துவ கட்டணங்கள், மற்றும் வைத்தியசாலை கட்டணங்களை அதிகரிக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தனியார் வைத்தியசாலைகளின் பிரதானிகளுடன் கொழும்பில் நேற்று காலை...

சுசந்திகா வைத்தியசாலையில் அனுமதி; கணவன் கைது

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம், இந்த ஆண்டு இறுதிக்குள் GSP+ சலுகையை பெற்றுக் கொள்வோம்

நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார். தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நேற்று நீக்கப்பட்டது. நாம் அதிகாரத்திற்கு வந்தால் இந்த தடையை நீக்குவதாக 2014ம் ஆண்டு...

யாழில் அப்துல்கலாமின் சிலை திறந்து வைத்து முதலமைச்சர் உரை

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில்...

விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவருக்கு கனடாவில் தஞ்சம்!!

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் ஒருவருக்கு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கப்பல் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட ரவிசங்கர் கனகராஜா எனப்படும் சங்கிலி என்பவருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. பாரியளவிலான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட மூன்று கப்பல்களை...

அரசின் காணி சுவீகரிப்பு செய்தி ஆச்சரியத்தை அளிக்கின்றது-ஆனந்தசங்கரி

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஹெக்டேர் காணியை மீளக்குடியேற்றத்திற்காக அரசு சுவிகரிக்கும் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த யோசனை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமையவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மிகவும் சிறந்த,...

வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு தொழிற்பயிற்சி

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியின் மூலமாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் அணுசரனையில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் ஆகியோருக்கான தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வீட்டு மின் உபயோகப் பொருள்களை திருத்துதல், தையல் வேலை ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும்...

சிறைபிடிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் விடுதலை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் அனுமதியின்றி கடலட்டை தொழில் ஈடுபட்டு, கட்டைக்காடு மீனவர் ஒருவரை தாக்கிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள் கட்டைக்காடு மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பிரதேச செயலார் ஆகியோரின் சமரச முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள், 55 படகுகளில்...

தோல் நோய்கள் தொடர்பில் வீடுவீடாக அறிவுரை

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழைக்குப் பின்னர், தோல் வியாதிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினரால் வீடு வீடாகச் சென்று ஆண், பெண், சிறுவர்கள் உட்பட வீடுகளில் தங்கியுள்ளவர்களை உடற்பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை (16) காலை நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராம அலுவலர் பிரிவுகளில் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்ப...

யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மை காலங்களில் வடக்கு...

ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மத்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும் என்று, தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.இது தொடர்பில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர...
Loading posts...

All posts loaded

No more posts