வயோதிபப் பெண் வெட்டிக்கொலை: ஒருவர் கைது!

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த வயோதிபப் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபகுதியைச் சேர்ந்த, 32 வயதான, ஒரு பிள்ளையின் தந்தையே சந்தேகத்தின்பேரில் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்ற வயோதிப் பெண், கடந்த...

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி பொறுப்பேற்பு!

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வாமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மாத்தல மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியுயர்வு பெற்றுள்ளார். யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பிரதிப்...
Ad Widget

பெண்ணொருவர் ஓட்டோ சாரதி ஒருவரை அடிக்கும் காணொளி!!

குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவருக்கும், யுவதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணைப்பு தளங்களில் அதீத பிரசித்தி அடைந்து வருகின்றது. சேட்டை செய்த ஓட்டோ சாரதியை செருப்பால் அடிக்கின்றார் இந்த யுவதி. இச்சண்டைக்கு வாரியபொல சண்டை – 2 என்று ஊடகவியலாளர்கள் பெயரிட்டு உள்ளனர். ஏற்கனவே சில...

யாழ் இந்துக்கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

தொடர்ந்து 3 வருடங்களாக யாழ் இந்துக்கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப்பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்க்கட்டமாக கடந்த மாசி (09.02.2016)மாதம் தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள்...

யாழில் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயம்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் கடலேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மண்டைதீவுக்கு அண்மித்த கடலேரி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளனர்....

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் காணாமல் போனதாக கூறப்படும் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கருதப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொள்வதே, இதன் நோக்கம் என, குறித்த...

வானிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு விஷமாகும் பயிர் வகைகள் ஐ.நா எச்சரிக்கை

தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் அதிகப்படியான வெப்ப நிலை ரசாயன கலவைகளின் குவிப்புக்கு வழிவகை செய்கிறது என வெளிப்படுத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு புதிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக கோதுமை, சிறு...

25 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டது வறுத்தலைவிளான் பாடசாலை

வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம்...

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பேரணி!

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை 9.30 அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வலயக்கல்வி அலுவலகம் வரை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர், வலயக் கல்விப்பணிப்பாளரிடம் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகளை எடுத்துக் கூறியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அத்துடன்...

போதைப்பொருள் கடத்தலை தடுக்க கரையோரப் பகுதி மக்கள் உதவ வேண்டும்!

யாழ்ப்பாணம் இப்போது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே, இக் கடத்தலைத் தடுப்பதற்கு கரையோரங்களில் வாழ்கின்ற பொதுமக்களே எமக்கு கூடுதலாக உதவ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். சென் பற்றிக்ஸ் வீதியில் உள்ள சென். றோக்ஸ் சனசமூக...

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் முக்கியமானது. அதற்கு பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள். தீர்வு காணவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு...

தமிழில் முறையிட வாய்ப்பளியுங்கள்

குற்றச்செயல்கள் தொடர்பில் தமிழில் முறைப்பாடு செய்வதற்கு வழிசமைத்துக் கொடுக்குமாறு, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். அண்மைக் காலமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபரிடம், அமைச்சர் கோரியுள்ளார்.

ஓ.ஐ.சியின் மகள் குத்திக்கொலை

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) யின் மகள், கலன்பிந்துனுவெவ பிரதேத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலியான பெண்ணின்,தாயும் காயமடைந்துள்ளதாகவும் அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதாவின் அழுத்தம் தொடர்ந்தும் வேண்டும்!

"தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. எனவே, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க மைத்திரி தலைமையிலான இலங்கை அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்."- இவ்வாறு வலியுறுத்தியுள்ளது...

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி ஜூன் 2 முதல் சொந்த இடத்தில் இயங்கும்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்...

அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் பாதிப்புகளுக்குப் பின்னரும் அவசியம்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புகளிலிருந்து விடுபட்ட பின்னர் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிடுகின்றனர் எனபதை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனர்த்தங்களைத் தவிர்க்க - பாதிப்புகளைக் குறைக்க - மக்களைப் பாதுகாக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களை வகுக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். நாட்டின் நலன்கருதி இதுபோன்ற விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றாக...

பொருத்து வீடுகள் இல்லை! வடக்கில் கல் வீடுகளே அமைக்கப்படும் அமைச்சர் விஜயகலா உறுதி

வடக்கு மாகாணத்துக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படமாட்டாது என்றும், கல் வீடுகளே வழங்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இயற்கை அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார். விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக்...

அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படும்

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார். நேற்று பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்...

பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈட்டைப் பெற உடன் பதிவு செய்யுங்கள்!

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முற்றாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதால், தமது பகுதிகளுக்கு சொந்தமான கிராம சேவகர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத்தை முகப்புப்புத்தகத்தில் பதிவேற்றிய மாணவன்மீது தாக்குதல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புகைப்படத்தை தனது முகப்புப் புத்தகத்தில் பதிவேற்றிய வந்தாறு மூலையைச் சேர்ந்த முகாமைத்துவ பீடம் 2ஆம் வருட மாணவன் மீது சிங்கள மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். லட்சியமூர்த்தி சுமேஸ்காந் என்ற 23 வயதுடைய மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் செவ்வாய்க்கிழமை மாலை தாக்குதலை நடாத்தியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்ட குறித்த மாணவன் செங்கலடி வைத்திசாலையில்...
Loading posts...

All posts loaded

No more posts