இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான ஆனால் ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.