கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சல் தலை நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2016) இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமரர் வி.வீரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்....

வடமாகாணத்திற்கான விசேட மத்தியஸ்த சபைகளை

தி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வட மாகாணத்தில் விசேட மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பிரதம அதீதியாக கலந்து கொண்டு மத்தியஸ்தர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,...
Ad Widget

மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டியின் விலை அதிகரிப்பு?

மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியின் விலை அதிகரிக்க கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டிக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்க கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.இந்த வரி அதிகரித்தமைக்கு அமைய விலை கணக்கீடு...

சிகிச்சைப் பலனின்றி மூதாட்டி பலி

யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மூதாட்டி, சிகிச்சைப் பலனின்றி நேற்று வியாழக்கிழமை(26) உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி மருமகனின் முச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பாலத்தின் தடுப்பு கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த மேரிமாக்கட் வயது(63) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

தற்காலிக வீடுபோதும் : ஒன்றரை மாதக் குழந்தையின் தந்தை மன்றாட்டம்

நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி - சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும் இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக...

யாழ். ஊடகங்கள் குறித்து வடமாகாணசபையில் காரசார விவாதம்!

வடக்கு மாகாணசபையின் 53ஆம் அமர்வு நேற்ற கைதடியில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்ற போது, குடாநாட்டு பத்திரிகைகள் மீது கடுமையான விமர்சனங்களை மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்மொழிந்தார். இதன்போது அவர் உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் இருந்து...

ஆதவன் மாஸ்டர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் (அய்யாத்துரை மோகன்தாஸ்) பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

தங்கச்சங்கிலி அறுத்தவருக்கு 1 வருட கடூழிய சிறைத்தண்டனை

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்த ஏழாலை பகுதியைச் சேர்ந்த நபருக்கு, 1 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்ற முன்னாள் நீதிவானும் தற்போதைய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார். அத்துடன், முதலாவது திருட்டு குற்றச்சாட்டுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இரண்டாவது...

அனர்த்தங்களுக்கு வடமாகாண சபையில் அனுதாபம்

அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவால் உயிரிழந்தவர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுதாபம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது, தமிழக முதல்வராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக் கூறினார்....

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் விடுதலை!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 8 பேர் நேற்று வியாழக்கிழமை அவர்களின் குடும்பத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ. எம். சி. ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம். எ. ஆர்....

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் எதிர்வரும் 06 திகதி ஆரம்பம்

சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய...

மக்களின் உதவியை நாடியுள்ள மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது. இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது. குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்....

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு

இம்முறை (2016ம் ஆண்டுக்கான) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கால எல்லை எதிர்வரும் (ஜூன்) 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தி.மு.க தலைவர் கருணாநிதி 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள்....

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலைக்கு சீனா உதவி

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது. நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்...

கராத்தே பயில அனுமதி மறுத்ததால் மாணவன் தற்கொலை!!

பாடசாலையில் கறாத்தே கற்பதற்கு பெற்றோர் அனுமதிக்காமையால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தரம் 6 கல்வி கற்கும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ் தேனினியன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்தவராவர். குறித்த மாணவனை பாடசாலையில் கறாத்தே பயிலுவதற்காக பெற்றோரிடம் கடிதம் வாங்கி...

கிழக்குப் பல்கலை மாணவன் மீதான இனவெறித் தாக்குதலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(24-05-2016) கிழக்குப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட 1ம் வருடத்தில் கல்வி பயிலும் இலட்சியமுர்த்தி சுமேஸ்காந்த் என்ற மாணவர் மீது சிங்கள மாணவர்கள் கண்முடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த குறித்த மாணவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த யுத்த காலத்தில் வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் இன அழிப்புக்கு உள்ளான மக்களை நினைவுகூரும் செயற்பாட்டில்...

நிரந்தர நியமனம் கோரி, சமூக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து சமூக சுகாதாரத் தொண்டர்கள, வடமாகாண சபையின் முன்பாக இன்று வியாழக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் செய்தனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்ற வேளையில் அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து...

மாமியின் ATM அட்டையை களவாடிய மருமகளுக்கு விளக்கமறியல்

கணவனின் அம்மாவுடைய (மாமி) ஏ.டி.எம் அட்டையை திருடி, 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த மருமகளை நாளை வெள்ளிக்கிழமை (27) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (25) உத்தரவிட்டார். பருத்தித்துறை, தும்பளையிலுள்ள கணவனின் தாயார் வீட்டுக்குச் கடந்த 18 ஆம் திகதி...
Loading posts...

All posts loaded

No more posts