வெள்ளம் பாதித்த பகுதிகளை சுத்தம் செய்யும் அமெரிக்கப் படையினர்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவக் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு-வெல்லம்பிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அமெரிக்க இராணுவத்தின் கடெற் தர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடெற் தர அதிகாரிகளுடன் இணைந்தே இவர்கள் இந்த சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு...

இன்று காலநிலை எப்படி இருக்கும்?

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (29) மழை பெய்யக் கூடும் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி மேல், வட மத்திய, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள, முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது

எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது. அவர்­களை சரி­ச­ம­மாக நடத்­தா­விட்டால் சரி­யான தீர்வை எங்­களால் எட்ட முடி­யாது என்­பதை திட்­ட­வட்­ட­மாக நாங்கள் ஏற்றுக் கொள்­கின்றோம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார். வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவ் அறிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, வட­கி­ழக்கு...

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார்....

களுகங்கை, நில்வள கங்கை, அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு : மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுகங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகளு ஓய ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுகங்கை பகுதியில் உள்ள மில்கந்த, பட்டுபவுள, நில்வள கங்கையின் பகுதியில் உள்ள பனடுகம, அத்தனகளு ஓயா பகுதியில் உள்ள துன்மலே...

ஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசிய வடமாகாண சபை உறுப்பினருக்கெதிராக கண்டன அறிக்கை!

ஒரு சில நாட்களுக்குமுன்னர் வடக்கு மாகாணசபையின் 53ஆவது அமர்வு நடந்துகொண்டிருந்த வேளையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் யாழிலிருந்து வெளிவரும் ஊடவியலாளர்களையும், ஊடகங்களையும் அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ். ஊடக அமையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தின் 4 அவது தூணான ஊடகத்துறை கடந்த 3 தசாப்தங்களில் 41 தமிழ் ஊடகவியலாளர்களை வடகிழக்குமாகாணங்களில்...

வாகனங்கள் மீதான வரியை நீக்க கோரிக்கை

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் அனைத்துப் பொருட்களுக்கும் வரி அறவிடும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே கூறினார். வாகன இறக்குமதிகளுக்காக புதிய வரி முறையை அறிமுகப்படுத்தியதன் காரணமாக வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். முச்சக்கர வண்டி...

யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பொருத்துவீடுகள் தகுதியானவை

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீடுகள் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானவையாக அமையும் என்று பேராதனை பல்கலைகழகம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.   மீள்குடியேற்றத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.   உலோகங்களினால் அமைக்கப்படும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளன.   இந்த வீடுகள்...

போருக்குப் பின்னர் வடக்கு மாகாணக்கல்வி பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது

வடக்கு மாகாண கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் வீழ்ச்­சி­ய­டை­யாது காணப்­பட்­டி­ருந்­தது. எனினும் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் கல்வி வளர்ச்­சி­யா­னது பாரி­ய­ளவில் வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதிராஜா தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பாணம் இரா­ம­நாதன் மகளிர் கல்­லூ­ரியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற வலி­காம வலய ஆசி­ரிய மாநாட்டில் பிரதம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே...

கந்தரோடையில் கைக்குண்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கந்தரோடைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது, முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் குறித்த நபர்...

கொழும்பில் மீண்டும் மழை; வீதிகள் வெள்ளத்தில்

கொழும்பில் நேற்று இரவு முதல் மீண்டும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் மண் சரிவு மற்றும் வெள்ள...

இராணுவத்தினர் காணி சுவீகரிப்பு: நீதிமன்றம் விசாரணை

யாழ்ப்பாணத்தில் மூன்று தனியார் காணிகளை கையகப்படுத்த இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. காணி உரிமையாளர்கள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீ பவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். கடந்த...

காணாமற்போனோர் தொடர்பான பணியகம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு!

காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றின் மூலம், காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்தநிலையிலேயே அரசாங்கம் காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி குறித்த பணியகத்தை அமைக்கவுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சுமத்தியுள்ளது. மனித உரிமைகள்...

கச்சதீவில் நடப்பதென்ன? இந்தியாவுக்கு இலங்கை விளக்கம்!

கச்சதீவில் பாதுகாப்புக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கச்சதீவில் அந்தோனியார் கோவில் அமைப்பதற்கு சிறீலங்கா கடற்படையினரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதுடன், இந்தியாவைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கம்...

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பு!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்ற மண்டபத்திலேயே குறித்த சந்திப்பும் நடைபெற்றது. இதன்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியல்சாசனமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு...

பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் றக்கா பகுதியில் சிவதாஸ் சிவதர்சினி என்ற 32 வயதுடைய பெண், அவரது வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (27) சடலமாக மீட்டுள்ளார் என பொலிஸார் என தெரிவித்தார். வீட்டிலுள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது குறித்த பெண், உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில்...

ஜெயலலிதா தொடர்பான சி.வி.யின் கூற்றுக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு

அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும்...

புதிய கட்சி தொடங்குகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகின்றது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்கமுடியாத நிலை காணப்படுவதால் கூட்டமைப்பு...

நல்லிணக்க வழிமுறையில் நல்லாட்சி அரசுக்கு வெற்றி! ஜனாதிபதி பெருமிதம்!!

"ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசு பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நிலையான அபிவிருத்தி சூழலுக்குமான வழியை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள்." இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பான் இஷி – சிமா நகரில் நேற்று நடைபெற்ற ஜி -...

மக்களை மீள்குடியேற்றம் செய்யும் சாத்தியக் கூறுகள் நல்லாட்சியிலும் இல்லை

வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரையில் நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படவில்லை என சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...
Loading posts...

All posts loaded

No more posts