ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு?

வட் வரி அதிகரிப்பை அடுத்து, முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்தது. இந்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில், முச்சக்கரவண்டி இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று இடம்பெற்றதாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஜீ.சுதில்...

நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை...
Ad Widget

யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் போராட்டம்

தமக்கான நியமனத்தினை வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகள் பெற்றுத்தரப்பட வேண்டும் என்று கோரி, யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் இன்று கவனீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர். பின்னர் அவ்விடத்துக்கு வந்த வடமாகாண...

பிரபாகரன் இறந்து விட்டார் ! விஜயகலாவின் கருத்துக்கு டக்லஸ் பதில்

எமக்கு கிடைத்த தகவல்களின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என, முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பிரபாகரனின்...

1ம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2017ம் ஆண்டுக்காக அரசாங்க பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்காக மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்களையும் மேலதிகத் தகவல்களையும் http://www.moe.gov.lk என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்காக காலஎல்லை ஜூன் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் விலை அதிகரித்தது ஏன்? அமைச்சர் பதில்

நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்துவோரின் தொகை அதிகரித்துள்ளதால், வாகனங்களுக்கான விலையும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் முச்சக்கர வண்டி பயன்படுத்துவோர் தொகை அதிகரித்துள்ளமை மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய, அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கலேவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அமைச்சர் ஜோன்...

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் வழங்கப்படும்!

நாட்டின் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்கவேண்டிய தேவையெழுந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கடமையாற்றிய மற்றும் கடமையாற்றிக்கொண்டிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகளை கடந்த வாரம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கையளிக்கப்படவுள்ள காணிகளின் திட்டவரைபுகள் படையினரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....

கருணாநிதிக்கு இரா.சம்பந்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியமைக்கு மக்கள் கண்டனம்!

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் கருணாநிதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு தமிழ் மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நிலையில் இருந்தும் கூட அதற்கான முயற்சிகள் எதனையும்...

வலிகளைச் சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் படைப்பாளி உருவாகவேண்டும்!

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு...

வித்தியா கொலை வழக்கு: விரைவில் தமிழ்மாறனும் காவல்துறை அதிகாரியும் கைதாகலாம்!

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது. வித்தியாவின் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராக லலித் ஜெயசிங்க கடமையிலிருந்தார். இவர் சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனின் மாணவர் எனத் தெரியவருகின்றது. சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட...

புதிய கட்சி தேவையற்றது: வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் உறவு சிறப்பாக உள்ளதாகவும் தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்கவேண்டுமெனவும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போகின்றார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும்,...

இலங்கையில் போலியோ நோயை ஒழிப்பதில் விடுதலைப் புலிகளும் முக்கிய பங்கு வகித்தனர்!

சிறீலங்கா முழுவதும் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்ட தினமான தேசிய நோய்த் தடுப்புத் தினமன்று, நீங்கள் ஆயுதங்களை கீழே வைக்கத் தயாரானால் நாமும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என விடுதலைப்புலிகள் கடிதம் மூலமாக அறிவித்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் தலைநகர்...

அதிகாலை வேளை வீட்டுக்குள் கைவரிசை

தாவடிச் சந்திப்பகுதியில் 14 பவுண் நகைகள் மற்றும் 25,000 பணம் என்பன நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிலிருந்தோர் நித்திரையிலிருந்த நேரம் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 14 பவுண் நகைகள் மற்றும் 25,000 பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளனர். மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கோப்பாய் சந்தியில் தன்னியக்க வீதிச்சமிஞ்கை பொருத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதான வீதியின் கோப்பாய் சந்தியில் தன்னியக்க வீதிச் சமிஞ்கை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்பாய் சந்தியில் வீதி விபத்துக்களினால் கடந்த வருடம் பலர் உயிரிழந்திருந்தனர். இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலகம் குறித்த பகுதியில் வீதி சமிஞ்கையினை பொருத்தி தருமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரியிருந்தது....

அனர்த்தப்பொதி தயாரா?

திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக...

வடக்குக்கும் விஜயம் செய்வார் டொரே ஹேடர்ம்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) தனது இலங்கை விஜயத்தின் போது, வட மாகாணத்துக்கும் வருவார் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ம் திகதி அவர் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதோடு, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். டொரே ஹேடர்ம் எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் ஜூன்...

கிளிநொச்சியில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் இருந்து ஒரு தொகை வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 கிளைமோர் குண்டுகள், 65 கைக்குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் போன்றவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அப் பகுதியிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

வடக்கில் 65000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு நிபுணர் குழுவினர் அனுமதி

வடக்கில் 65000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு நிபுணர் குழுவினர் அனுமதி வழங்கியுள்ளதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த வீடமைப்பு திட்டத்தில் பாதிப்பு கிடையாது என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வழமையான சீமெந்து கல் வீடுகள் மற்றும் உலோகத்திலான...

யுத்தத்தின் கொடூரம் கிளிநொச்சியில் 282 போ் கண்களை இழந்துள்ளனா்.

நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா். இந்த...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து புதிய வழிகாட்டல்கள் அறிமுகம்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில்...
Loading posts...

All posts loaded

No more posts