Ad Widget

உள்நாட்டு விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்!

போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளாமையைக் கண்டித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே உள்ளக விசாரணையைக் கருத்தில்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைகள்மூலம் நீதியை நிலைநாட்டுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை.

தெற்கிலுள்ள தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு அஞ்சினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாது.

வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வு ஒன்றின்மூலமே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என வடக்கிற்குப் பயணம் செய்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளேன்.

அடுத்த ஐநா கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்து உண்மைகளையும் ஐநா சபையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related Posts