மீள்குடியமரும் மக்களின் சவால்களை நாம் புரிந்துகொண்டுள்ளோம்!

"நீண்ட கால இடப்பெயர்வின் பின்னர் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் போது, நீங்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்கின்றீர்கள். இதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்." இவ்வாறு நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை வந்த அவர், மக்கள் மீள்குடியமர்வுக்கு கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட வளலாய்க்குச் சென்றார். அங்கு மீளக்குடியமர்ந்த மக்களுக்கு...

வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம்களுக்கு 21 ஆயிரத்து 663 வீடுகள்!

போரினால் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்த...
Ad Widget

புலம்பெயர் இலங்கையர்கள் இனி இலங்கைக் கடவுச்சீட்டு பெறலாம்

கடந்த காலத்தில் நாட்டில் இருந்த முரண்பாடுகள் மற்றும் அரசியல் காணரங்களால் புலம்பெயர்ந்துள்ள இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இத்தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை இன்று புதன்கிழமை காலை பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வாக்காளர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து...

104 குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிப்பு

பலாலி வடக்கில் மீளக்குடியமர பதிவு செய்து காணி இல்லாத 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணி பிரிவு ஊடாக தலா 2 பரப்பு காணி நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது....

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் வடக்கு முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவர் இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்ததுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

சாரதி தூங்கியதால் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய பஸ்!

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது சாரதியின் கவனக்குறைவினாலும்...

விஜயகலா அனந்தி கருத்து மோதல்!!

யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை அமைச்சர் விஜயகலாவுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரனுக்கும் இடையில் கருத்து மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிரதேசசெயலாளர் ஒருவரை மாற்றியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்குநான் சமுகமளிக்க விரும்பவில்லை. ஏனெனில்...

தகாத உறவு: யாழ் இளைஞன் சிறையில்!

யாழில் 36 வயதான சட்டத்தரணியின் மனைவியுடன் ஏற்பட்ட காதல் போதையில் 26 வயதான இளைஞன் ஒருவன் சிறைக்குச் சென்றதுடன் தனது 40 இலட்சம் ரூபாவையும் இழந்துள்ளார். இரத்மலானைப் பகுதியில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவருடைய 36 வயதான மனைவியுடன் புடவைக்கடையில் வேலை செய்யும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி...

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு: கிளிநொச்சியில் நபர் கைது

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச்...

முச்சக்கரவண்டிக்குப் பதிலாக கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது!

முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே அதற்குப் பதிலாக சிறிய ரக கார்களை இறக்குமதி...

சீனத் தூதுவரைச் சந்தித்தனர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச்...

சொல்வதைச் செய்கிறார்கள் இல்லை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர்...

வலி.வடக்கில் 400 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!

வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள 400 ஏக்கர் காணிகள் இன்னும் சில வாரங்களில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன...

மாகாண சபைகளை புறக்கணித்து தீர்மானம் எடுப்பதை கண்டிக்கிறேன்

மாகாண சபையைப் புறக்கணித்து மக்கள் சார்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியல் மட்டத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை நிர்வாக மட்டத்தில் எடுப்பது மக்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். உதாரணமாக அரசாங்க அலுவலர்கள் இராணுவத்திற்குப் பயந்து மக்களின்...

மஹிந்தவின் மாளிகையை கேட்கிறது வடமாகாண சபை

காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் கட்டப்பட்டுள்ள மாளிகையினை வடமாகாண சபையின் பாவனைக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். யாழ்.மாவட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது, வடமாகாண சபையின்...

23,000 பேர் புதிதாக ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்!

எதிர்வரும் நாட்களில் புதிதாக 23,000 பேர் ஆசியரிய சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த நியமனம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட போட்டிப்பரீட்சையொன்று வைக்கப்பட்டுத் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கஜதீபன், பரஞ்சோதி கடும் வாக்குவாதம்

தெல்லிப்பழை (வலிகாமம் வடக்கு) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று திங்கட்கிழமை (30), நடைபெற்றது. இதன்போது, உரும்பிராயில் தற்காலிகமாக இயங்கிவரும் பாடசாலையொன்றை, சொந்த இடத்தில் இயங்கவைப்பது தொடர்பில் பாலச்சந்திரன் கஜதீபன், ஆரியகுட்டி பரஞ்சோதி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

அதிகமாக மது அருந்தியவர் உயிரிழப்பு

குழந்தை பிறந்து 31ஆம் நாள் நிகழ்வில் அதிக மதுபானம் அருந்திய தந்தை உயிரிழந்த சம்பவம் சங்கானை, ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அரியேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே அதிகம் மதுவருந்தி உயிரிழந்துள்ளார். உறவினர்களுடன் சேர்ந்து அதிக மதுபானம் அருந்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை...

கஞ்சா கடத்தலுடன் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா கடத்தலுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றச்சாட்டியுள்ளார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts