Ad Widget

விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்

பட்டா ரக வாகனம் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் ஒருபடுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். வண்ணார் பண்ணை சிவன் கோவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த தேவராசா நிரோசன் (வயது 17) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும், குறித்த மாணவன் இன்று வியாழக்கிழமை காலை பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் வருகை தந்துகொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts