Ad Widget

மாணவிகள் ஐவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

யாழ். நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் ஐவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆசிரியரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார் விசாரனைகளை, அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts