வடமாகாணத்தில் கடந்த காலத்தில் அசாதாரண சூழல் காரணமாக (போர்காலத்தில்) கால்களை இழந்த 310 பேர்களுக்கான மாற்றுக்கால்களை வழங்கும் நிகழ்வு இன்று யாழ் இலங்கை வேந்தன் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக யாழ் இந்திய உதவி துணைத் தூதுவர் அ.நடராஐன் மற்றும் மாவட்ட ரொட்றிக் கழக ஆளுநர் பி.வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் யாழ் மாவட்டத்தில் 165 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 195 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 187 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 230 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 145 பேருக்கும் மாற்றுக்கால்கள் வழங்கப்பட்டன.
மூன்று கோடி ரூபா செலவில் இம்மாற்றுக்கால்கள் கொள்வனவு செய்யப்பட்டு கால்களை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டன.