Ad Widget

மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாள் விளக்கமறியல்

மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நகர்ப்புறப் பாடாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை சாவகச்சேரி நீதிமன்றம் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 15 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்புறப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிற்கும் ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனைத் தாக்கியபோது குறித்த மாணவன் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிசார் மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியரை நேற்று இரவு (23) கைதுசெய்த சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது குறித்த ஆசிரியரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts