- Thursday
- March 5th, 2026
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா கொழும்பு பொலிஸ் வாகனப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒருவருடமாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியிருந்தார். யாழ்.மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக, மாத்தளை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்...
மின் இணைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு மின்வலுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவுக்கும் ஜனாதிபதி இவ்வாறு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை...
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில் ஆகியவற்றில், இந்தியாவின் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....
தற்போது இலங்கையில் உள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரேயாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அத்திட்டிய மிஹிந்து செத் மதுரவில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். எமது படைவீரர்களின் யுத்த வெற்றியை மலினப்படுத்தக் கூடாது.ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காகவுமே...
2.1 மில்லியனுக்கு சூழலுக்கு ஏற்புடையதற்ற வீட்டினை கட்டுவது குறித்து தமக்கும் புரியவில்லை என ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் டேவிட் டலி நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர் டேவிட் டலி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், அந்த...
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரோனு சூறாவளி காங்கேசன்துறைக்கு வடக்கே 900 கிலோமீ்ற்றர் தொலைவில் வடக்கு நோக்கி இலங்கையை தாண்டி செல்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலான மழை...
இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த...
எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றம் காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு...
புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் இறப்பு உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாக உலகவாழ் பெளத்த மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான புனித வெசாக் போயா தினமானது இலங்கையர்களான எம் அனைவருக்கும் மிகவும் முக்கிய சமய தினமொன்றாக விளங்குகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இலங்கை மக்களுக்கு இப்புனித போயா தினத்தில் வாழ்த்துவதற்கு வாய்ப்புக்...
தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றவுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பர் என்பதுடன் அவரது தீவிர ரசிகர்...
தமிழ்நாட்டு முதல்வராக மீண்டும் செல்வி ஜெயராம் ஜெயலலிதா தெரிவாகியதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, வருங்காலத்தில் செல்வி ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என எதிர்பார்க்கின்றேன். தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக்கியதிலிருந்து மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றது. அதனால் அவர்...
இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தும் மக்கள் வெளியேறவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை...
'நான் கொழும்பில் பிறந்து வளந்தவன். அந்தவகையில் எனது தமிழ் உச்சரிப்பு என்பது வடக்கு மக்களின் தமிழ் உச்சரிப்புக்கு நிகரானதாக காணப்படுவதில்லை. இருந்தும் நான் தமிழில் பேசுகிறேன். எனது தமிழ் உச்சரிப்பு தொடர்பில் ஊடகங்கள் குற்றம் கண்டுபிடிக்கின்றார்கள்' என வடமாகாண ஆளுனர் ரெஜினல்ட் கூரே தெரிவித்தார். நீர்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின்...
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவின் பேச்சு, நடவடிக்கை வேறுவிதமாக இருக்கின்றது. அவர் அரசியல்வாதியாக இருந்தவர். மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். அதனால், அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். வடமாகாணத்திலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். பொது நூலக மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர்...
தென்னிந்தியாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி காங்கேசன்துறைக்கு வடக்கே 400 கிலோமீ்ற்றர தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலாம். ஆயினும் நாட்டின் வடபகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்தே காணப்படும். எனினும் இச்சூறாவளியால் இலங்கையில் பெரிதளவான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படா விடினும் காற்றின் பாதிப்புக்கள் காணப்படுமெனவும்...
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கே முதலிடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை...
யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்.. யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், சண்டிலிப்பாய், வேலனை, உடுவில்,தெல்லிப்பளை,பருத்தித்துறை உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள தற்காலிக...
Loading posts...
All posts loaded
No more posts
