Ad Widget

பஸ் சாரதிகளுக்கான விஷேட அனுமதிப் பத்திரம் அடுத்த மாதம் முதல் கட்டாயம்

மக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு வழங்கப்படும் விஷேட அனுமதிப் பத்திரத்தை அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த மாத ஆரம்பம் முதல் குறித்த அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் சாரதிகளும் இந்த அனுமதிப் பத்திரத்தை பெறுவது கட்டாயமானது எனவும் அமரசிரி சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts