- Friday
- March 6th, 2026
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் (உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, சமுர்த்தி வங்கி அருகில்) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. யாழ்போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்படும் இந்த சிறப்பு...
நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே இக்கண்டு பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிகம பிரதேசத்தில் முதுகமுவ அதபத்து வத்தையில் வசித்து வந்த சோமா அத்த பத்துவே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணியாளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி பணியாள் வெளி வேலை காரணமாக...
கொழும்பு கொஸ்கம குண்டு வெடிப்புச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்த சிங்களப் பெண் ஒருவர் ‘இப்படிக் குண்டுகளையா வன்னியில் போட்டு தமிழர்களைக் கொன்றார்கள்‘ என கேட்டுப் புலம்பியுள்ளார். இராணுவ முகாம் இருந்த பகுதிக்கு அருகில் குடும்பத்துடன் வசிக்கும் இப் பெண்ணின் வீடும் குண்டு வெடிப்பால் கடும் சேதமடைந்திருந்தது. தனது வீட்டில் பறந்து வந்து கிடந்த பாரிய...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன்களை திருப்பி செலுத்திய பின்னர் வரி வீதங்கள் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய அவர், ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன்களுக்காகவே இன்று வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறுகிய கால இலக்கின் அடிப்படையில் வரிகளை குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்....
வடக்கு மாகாணசபையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி போல செயற்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதுடன், சபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் என வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். மாகாண சபையின் எதிர்க்கட்சியாகவுள்ள நாங்களே சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், ஆளும்...
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலைசெய்யும் ஊழியரை, கடை உரிமையாளர் தாக்கியதில் அந்த ஊழியர் செவித்திறன் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, உரிமையாளர்...
யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியில், அரச புலனாய்வு பிரிவினரே செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”போராட்ட காலத்தில்கூட எமது மாணவர்களின் கல்வியில் குறைவு ஏற்படவில்லை. கல்வியில்...
வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இலங்கையிலேயே நிலப் பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில் வைர மரங்களான முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தேக்கு மரங்கள்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட சில அமைச்சர்களுக்கு எதிராக சில உறுப்பினர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வட மாகாண முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்....
போர் முடிவடையும் வரை ஈ.பி.டி.பி.க்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மஹிந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த போது...
வடக்கு மகாணத்தில் இலவச அம்பியூலன்ஸ் சேவையை தரமுயர்த்த வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையிலே முதன் முதல் இலவச அரச அம்பியூலன்ஸ் சேவை, வட மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த சேவையை மக்கள்...
நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில்...
காணாமற்போனமைக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்டமூலத்தின் வரைவுக்கு, அமைச்சரவையினால் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறப்புகளைப் பதிதல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், 2010 இல. 19 என்ற சட்டத்தினைத் திருத்தல் தொடர்பாகவே, இந்தச் சட்டமூலம் குறிப்பிடுகிறது. அமைச்சரவையினால் இது அங்கிகாரமளிக்கப்பட்டுள்ள நிலையில், இது வர்த்தமானி மூலம் வெளியிடப்படுமெனவும், நாடாளுமன்றத்தில் இதைச் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகுமெனவும், வெளிநாட்டு அலுவல்கள்...
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கென முப்படையினரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் குழுவுக்கு பொலிஸ் தரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே 25 ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "தமிழ்த்...
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்காவைப் பார்வையிட முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை...
முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டிலான கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் அடக்குமுறைச் சட்டங்களை சுருட்டிக்கொள்ள வேண்டும் மற்றும் அனைத்து அரசியல் பழிவாங்கல்களையும் நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதில்,...
யாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலையில் மேலதிக வகுப்புக்காக சென்ற இவர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.00...
அரசாங்கம் உடனடியாக இராணுவ முகாம்களை பொது மக்கள் அற்ற இடங்களுக்கு மாற்ற வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். கொஸ்கம - சலாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச்...
Loading posts...
All posts loaded
No more posts
