கே.கே.எஸ் கடற்பாறையில் இருந்து 158 கிலோ கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 31.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடல்...

சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் உத்தரவு

கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கொஸ்கம பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீயினாலும் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தினாலும் ஏற்பட்ட சேதங்களை ஆய்வுசெய்தார். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும்...
Ad Widget

இவர்களை தெரியுமா?? பொதுமக்களிடம் உதவிகேட்கும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கடந்த கால வாள் வெட்டு சம்பவங்கள், ஆட்கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று சந்தேக நபர்களை இனங்காட்டி தருமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர்...

பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி எம்.இளஞ்செழியன்!

2003 ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின்முதலாவது எதிரிக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை நேற்று வழங்கியமை விசேட அம்சமாகும். குறிக்கப்பட்ட வழக்கில் இறந்துபோன...

1000கோடி பெறுமதியான வெடிபொருட்கள் நாசம்!

கொஸ்கம-சலாவ இராணுவமுகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் வெடித்து அழிந்துபோயுள்ளதாக ஆங்கில நாழிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் 9000 தொன் வெடிபொருட்கள் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன. இதன் பெறுமதி 1000கோடியாகும். இந்த வெடிபொருட் களஞ்சியசாலை சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் 1990 களில் சலாவ பகுதியில்...

நாவற்குழியில் இராணுவக் குடியிருப்பு!

யாழ்நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் இராணுவக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திட்டத்தின்படியே இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் அமைக்கப்பட்டு தற்போது அமைதியாகவும் எந்தவொரு எதிர்ப்புமின்றி விரிவாக்கப்பட்டுவருகின்றது. தற்போதைய அதிபர்...

ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஐ.நாவில் முறையிடுவோம்!

ஐநாவில் நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை சிறீலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லையென ஐநாவில் முறையிடப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தபோதிலும் ஒருசில காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெருமளவிலான அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்தபோதிலும் ஒரு சில கைதிகளே விடுதலைசெய்யப்பட்டனர் எனவும் சுமந்திரன்...

மீள்குடியேற்ற விவகாரம்: தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் மாற்றமில்லை

'யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசம் தொடர்பில், இராணுவத்தினர் இதுவரையில் தமது எதிர்ப்பினையோ அல்லது காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன்வைக்கவில்லை. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் நான், கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

இராணுவ வாகனத்துடன் மோதி கிராமசேவையாளர் படுகாயம்

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ ஹப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கிராமசேவையாளர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 9 மணியளவில் தெல்லிப்பளை சந்தியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நுணாவில் ஜே-309 கிராமசேவையாளராக கடமையாற்றும் ஐயாத்தம்பி...

வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாதோர் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் காயம்

கைதடி, நாவற்குழி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இனந்தெரியாதோர் சிலர், அந்த வீட்டிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட நால்வர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், கேதீஸ்வரன் சுகந்தன் (வயது 25) அவரது மனைவி சுகந்தன் நமீரா (வயது 26), இவர்களது குழந்தை சுகந்தன் கிருத்திகன் (1...

பிரித்தானிய பிரதிநிதிகளுடன் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான வதிவிட செயலாளர் சைமன் மெக்டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லோவ்கோக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சிகரெட் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

சகல வகையான சிகரெட்டுகளின் விலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படகூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று(06) மாலை தென்பட்டதனால் இன்று(07) ரமழான் புனித நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை கூடிய தலைப்பிறையை தீர்மானிக்கும் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உட்பட கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம் அமைப்புகளின்...

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம் யாருடையது?

நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் நேற்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர், அதனை, யாழ். போதனா வைத்தியசாலை...

பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பில் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, அவர் பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்

தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, அதனை செவ்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும், கல்வி இராஜாங்க அமைச்சரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் பிரிவிற்கு சேவையாற்ற கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர்...

யாழில் பொலிசாரால் சிறைப்பிடிக்கப்பட்ட அதி சொகுசு பஸ்!

யாழ் – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ் ஒன்று உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமை, அனுமதிப் பத்திர உண்மைத் தன்மையில் சந்தேகம் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நேற்றைய தினம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பஸ் ஒன்று உரிய வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினாலும், குறித்த அனுமதிப் பத்திரத்தின்...

எனது அரசியலை தொடர்ந்து கொண்டு செல்பவரை இறைவனே தீர்மானிப்பார்!

வடக்கில் படையினர் வசம் உள்ள பல காணிகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள் தகவல்களை தரவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார். அவர் யாழ்ப்பாண செய்தியாளர் யாழ்.தீபனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்:- கேள்வி: வடக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் குறித்து நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் எதுவரை எந்தளவில் வெற்றியளித்துள்ளன? பதில்: தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து...

கவனயீர்ப்பு போராட்டத்தில் சமூக சுகாதார தொண்டர்கள்

யாழ்ப்பாணம் - பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை 8.30 முதல், சுகாதார அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வட மாகாணசபைக்கு முன்பாக பல தடவையும் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் தாங்கள்...

பசில் ராஜபக்ஷ கைது!

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts