சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் மாஅதிபர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்தில் தற்சமயம் தலைவிரித்து ஆடும் சட்ட ஒழுங்கு சீரற்ற கொலை, கொள்ளை நடவடிக்கைகளை நேரடியாக தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முகமாக யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மாஅதிபர் பூசித ஜயசுந்தர அனுப்பிவைக்கப்படுவார் என சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி...

தென்மராட்சியில் மூன்று இடங்களில் இ.போ.ச பேரூந்துகள் மீது தாக்குதல்

தென்மராட்சி பிரதேசத்தின் மூன்று இடங்களில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்துகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். அடையாளந் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பேரூந்தின் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதோடு, பேரூந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. முதலாவது தாக்குதல் கிளிநொச்சி சாலைக்குச்...
Ad Widget

அங்கசேஷ்ட்டை புரிபவர்களால் மாணவிகள் அவதி

வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்....

அரசாங்க வேலைகளில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிப்பு

'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. எமது பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. எமது மக்களின் தொழில்வாய்ப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் அரசாங்க வேலைகளில் உள்வாங்குவதில் புறுக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் முழுநாள் விவாதம் ஒன்றை நாம் நாடாளுமன்றத்தில் செய்யவுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரின்...

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்

ஜெனிவாஅமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக்...

17 மணித்தியாலங்களுக்குப் பிறகு இரண்டு குண்டுகள் வெடித்தன

கொஸ்கம இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன.

பலத்த காற்று வீசும்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் அடிக்கடி பலத்த காற்று வீசும் சாத்தியமுள்ளதால் கடலுக்கு செல்வோர் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரை மற்றும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 65 கிலோமீற்றர்...

தமிழ் மக்கள் பேரவையுடன் சர்வதேச சட்ட வல்லுனர் பிரான்சிஸ் பொயில்!

தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழுவின் சர்வதேச சட்ட ஆலோசகராக சர்வதேச சட்ட வல்லுனரும், பிரபல்ய போர்க்குற்றம் மற்றும் இனஅழிப்பு சட்ட வல்லுனருமாகிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் இணைந்துள்ளார். ஒரு உள்ளக விசாரணைகூட இம்மியளவும் நகராத நிலையில், அதுவும் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சேர்த்துகொள்ளப்படமாட்டார்கள் என செய்திகள் வரும்...

இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல!

இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல, அதனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில், எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்திலேயே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் கிடைப்பதற்கு வழியமைக்க வேண்டும் என, மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதற்காக...

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு அடிப்படையில் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் தலைவர் லியனகே தலைமையில் முன்னாள் ஊழியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம்பெற்றது. சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு 4...

கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்!! வைத்தியசாலையின் கவனயீனம் காரணமா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததால் அவரது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ராசா றமணி என்பவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,...

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய மூன்று உபகுழுக்கள் ஆரம்பம்!

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவை தனது முக்கிய மூன்று உபகுழுக்களை ஆரம்பித்துவைத்து அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. இச்செய்தியாளர் மாநாட்டில், கலை கலாசாரத்திற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் (சின்மயா மிஷன்), அருட்தந்தை மரிய சேவியர் (திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர்) மற்றும் திரு. T...

சலாவ வெடிப்புச்சம்பவம் நாசவேலையாக இருக்கலாம்!

கொஸ்கம-சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு சம்பவ இடத்திற்கு பயணம் செய்து நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் பின்னர் கருத்து வெளியிடுகையில், சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடிக்கத் தொடங்கியதால் அதன் அருகில் எவரும் செல்ல முடியாத...

மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து உத்தரவிட்டார். அச்சுவேலி - பத்தமேனி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், இடைக்காடு பகுதியைச் சேர்ந்த...

யாழ். மாவட்டத்தில் இதுவரை 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும்...

அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்பு!

நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி...

இராணுவ முகாம் தீ விபத்து : 8 பேர் உயிரிழப்பு :39 பேர் வைத்தியசாலையில்

கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது....

காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு

காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால தெரிவித்துள்ளார். யட்டயந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை; ஐ.நாவில் நிரூபிக்க முடியுமா?

ஸ்ரீலங்காவில் இறுதியுத்தத்தில் 40 ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பவற்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐ.நாவில் தெரிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் மாவை...
Loading posts...

All posts loaded

No more posts