Ad Widget

மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கிய அதிபர்!!

பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் வகுப்பறையில் குழப்படி செய்தமைக்கு, தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தினை அறிந்த நபர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு 119 இலக்கத்தின் ஊடாக முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பாடசாலை அதிபரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அதிபரை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதுடன், யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts