Ad Widget

மாணவனைத் தாக்கியதில் செவிப்பறை பாதிப்பு!!! 3 ஆசிரியர்கள் விளக்கமறியலில்!

சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரைத் தாக்கியதால் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் கல்விகற்கும் குறித்த மாணவனை அப்பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் அடித்ததில் மாணவனது செவிப்பறை பாதிப்படைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

இந்நிலையில், கடந்த வாரம் வைத்தியசாலைக்குச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் மாணவனை அச்சுறுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் நேற்று(செவ்வாய்க்கிழமை) சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தகேசன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவனைத் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் எதிர்வரும் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts