புத்தூர் – வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை 3.45 மணியளவில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வேக்ககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்றவர்கள் மோதிக் கொண்டு வீதியோர மதில் சுவரையும் உடைத்துக் கொண்டு உட்சென்றது. இதில் வீதியில் நின்ற ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த பேரின்பராசா சிறிரஞ்சன் (வயது 36) என்பவர் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்