உடுவில் மகளீர்கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் விடுத்த அறிக்கை

உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது. உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின்...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சாம்சூங்( Samsung Note 7) தொலைபேசிக்கு தடை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் Samsung Note 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து,...
Ad Widget

காணாமல் போன மகனை காண ஏங்கிய தாய் மரணம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான் சாவடைவதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று மக்ஸ்வெல் பரணகம தலை மையிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன் கதறி அழுத தாய், அவரது கோரிக்கைகள் நிறை வடையாத நிலையில் உயிரிழந்துள்ளார். 2015ஆம் ஆண்டு பருத்தித் துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற காணாமல்...

எழுக தமிழ் மக்கள் பேரணி எழுச்சியுடன் அமைய வேண்டும் : சித்தார்த்தன் எம்.பி அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...

அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பதற்கு நியாயமான எந்தவொரு காரணமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு தடவைகள் அவர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் இன்றி...

தமிழர்களின் நம்பிக்கை வென்றெடுக்க, வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் அரசாங்கம் உறுதி மொழிகளை வழங்கிய போதிலும் சர்வதேச விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குதல் உள்ளிட்ட விடயங்களில் பின்வாங்கியுள்ளதாக...

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராகப் போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்?

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...

தமிழ்க்கொலைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்!

அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள இலத்திரனியில் அறிவிப்புப் பலகைககளில் தமிழ் மொழி மோசமான தவறுகளுடன் பிரசுரிக்கப்படுவதை நேரில் சென்று ஆராய்ந்த நிலையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை...

கூடுதல் விலையில் சீனி விற்றால் கடும் நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார். இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை,...

கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து! பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நாசம்!!

கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து...

இலங்கையில் நடன கலையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா நிதி உதவி

இலங்கையில் நடன கலையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. தமிழ் நடன மற்றும் ஆதிவாசிகளின் கலைகளின் பாதுகாப்புக்காகவும் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது. நாட்டின் பாரம்பரிய மற்றும் வழிபாட்டு கலைத்துறை நடனங்கள் உலக நாடுகளில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இவ்வருடத்தில் கலாசார பாதுகாப்புக்காக அமெரிக்க நிதியத்திலிருந்து, தெரிவு செய்யப்பட்ட...

வட மாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஏ.ஏ சரத்குமார கடமையை பொறுப்பேற்றுள்ளார். நேற்று முன்தினம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையேற்றுக்கொண்டார். இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மரியாதை அணிவகுப்பை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர் சுப நேரத்தில் கையெழுத்திட்டு தனது...

தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப்போவது அரசியலல்ல தமிழ்மொழியே!

தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள், தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கலை, கலாச்சார...

கோலூன்றிப் பாய்தலில் மகாஜனாக் கல்லூரி மாணவி புதிய சாதனை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம...

காவிரி நதிநீர்ப் பிரச்சினை : யாழில் உண்ணாவிரத போராட்டம்

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இடம்பெறும் பூரண கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று வௌ்ளிக்கிழமை (16), உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பங்கெடுத்து வரும் தமிழக மக்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட மக்கள்...

‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’; இரா.சம்பந்தன்

புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த நாட்டில் உருவாக்கும் புதிய அரசியல் யாப்பானது சகல மக்களுக்கு ஏற்புடையதாகவும் நாடு பிளவுபடாத வகையிலும் ஒருமித்த நாட்டினுள் சகலரும் சம...

அழைப்புக் கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை

அலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் காரணமாக அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பன 100க்கு 50 சதவீதமளவில் அதிகரிக்கப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணங்களுக்கு...

இன்று தென்படும் சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்கலாம்

இன்று (16) இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திரகிரகணம் தென்படும் என இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது. முழு சந்திர கிரகண நிகழ்வு நள்ளிரவு 12.24 மணிக்கு தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறவுள்ள சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும்...

‘திலீபனின் ஆசையை நிறைவேற்றுவோம்’ : முன்னாள் போராளிகள் சபதம்

‘தியாகி திலீபனின் அஹிம்சை வழிப் போராட்டத்தினை முன்மாதிரியாகக் கொண்டு அஹிம்சை வழியில் போராடி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்’ என முன்னாள் போராளிகள் சபதம் எடுத்துள்ளனர். தியாகி திலீபன் அஹிம்சை வழிப் போராட்டத்தின் 29வது நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள...

யாழில் செல் வெடித்து ஒருவர் படுகாயம்!

வெடிக்காத நிலையில் இருந்த செல் ஒன்றை உடைக்கமுற்பட்டவேளை, அந்தச் செல் வெடித்து யாழ்ப்பாணத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் 3ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது – 37) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். பழைய செல்களில் இருக்கும் மருந்துகள் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த நபர் வெடிக்காத செல்களில் இருந்து...
Loading posts...

All posts loaded

No more posts