Ad Widget

அமெரிக்க கிறீன்கார்ட் -2018 சீட்டிழுப்புக்கு விண்ணப்பம் கோரல்

அமெரிக்க கிறீன்கார்ட் சீட்டிழுப்பு நிகழ்ச்சித்திட்டம் 2018 இற்கான விண்ணப்படிவங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி இரவு 9.30 வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இணையம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

இந்த சீட்டிழுப்பின் மூலம் எழுந்தமான முறையில் தெரிவாகுவோர் நேரடியாக அமெரிக்க வீசா நேர்முக தேர்வுக்கு உள்வாங்கப்படுவர். அவர்கள் அதில் தகுதி பெற்றால் நிரந்தரமான அமெரிக்க பிரஜைகளாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.

2018 ஆம் ஆண்டுக்கு வீசா வழங்குவதற்கு 2017 இல் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு https://www.dvlottery.state.gov/ எனும் முகவரியைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts