Ad Widget

யாழ்.நகர பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!! மாணவன் வைத்தியசாலையில்!!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாகவும் இதனால் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த வேளை ஏனைய மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததால் ஆத்திரம் கொண்ட ஆசிரியர் மாணவனைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவருக்கு காதுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாத மாணவர் பாடசாலையில் அழுதவாறே இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த மாணவரின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது. பாடசாலைக்கு வந்த பெற்றோர் மாணவரை அழைத்துச் சென்று யாழ்.போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலைப் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்

Related Posts