TRAIL நடைபவனியை ஆரம்பித்து வைத்தார் வடக்கு முதல்வர்!

காலி ஹராபிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நடைபவனி இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆரம்பமாகியது. இந்த நடைபவனியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். நடை பவனிக்கான ஆரம்ப வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்...

வாள்வெட்டு குழு சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்களை யாழ் பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் இருந்து நான்கு சந்தேகநபர்கள் யாழ் பொலிஸ்...
Ad Widget

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவரின் படங்கள் காட்சிப்படுத்த தடை

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் படங்களை காட்சிப்படுத்த பெற்றோர், பாடசாலை மட்டத்திலோ பணஅறவீடுசெய்து காட்சிப்படுத்துவதை இந்த வருடத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வியமைச்சு அவசரமாக சுற்று நிரூபமொ ன்றை நேற்று சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. ஏதேனும் பாராட்டினை மேற்கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய மாணவர்களை பாதி க்காத வகையில் பாடசாலையினுள் அடங்கும் நிகழ்ச்சித்...

யாழில் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

இரண்டு கிலோகிராம் கஞ்சா பொதியை யாழில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற நபரை 06.10.2016 யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக சங்கானைப் பகுதியிலிருந்து கஞ்சா பொதியொன்று பஸ்ஸில் கைமாற்றப்படுவதாக கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்து குறித்த பஸ்ஸை மறித்துச் சோதனை செய்த பொலிஸார் அச்சந்தேகநபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த...

எட்கா உடன்படிக்கை இந்த வருட இறுதியில் கையொப்பமிடப்படும்

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இதற்கு இருநாட்டு பிரதமர்களும் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இடம்பெறும் பொருளாதார மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

அன்ரனி ஜெகநாதனின் உடல் இன்று நல்லடக்கம்!

வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம் பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அவருடைய பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் உயிரிழந்த பிரதி...

யாழில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் மறுப்பு

யாழ்ப்பாணம் பிரம்படி 2 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார். மேற்படி பகுதியில் புதன்கிழமை (05) மாலை நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில்...

வடக்கு மக்கள் சுதந்திரமாக உள்ளனர்: இந்தியாவில் பிரதமர் ரணில்

வட பகுதி மக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்திற்கு நேரில் வந்து பார்த்தால் இதனை அறியலாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் கூறியுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், நேற்று (புதன்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்புக்களை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போது, யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறுள்ளதென ஊடகவியலாளர்களால்...

 வடமாகாண சபையில் அஞ்சலி

காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (06) அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண...

பேரூந்தும் பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம்!

வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் எழுதுமட்டுவாள் வீதிக்கு அருகில் நடந்த விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி வந்த பார ஊர்தியும் மோதியமையாலயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

யாழ்.நகர பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!! மாணவன் வைத்தியசாலையில்!!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாகவும் இதனால் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம்...

அமெரிக்க கிறீன்கார்ட் -2018 சீட்டிழுப்புக்கு விண்ணப்பம் கோரல்

அமெரிக்க கிறீன்கார்ட் சீட்டிழுப்பு நிகழ்ச்சித்திட்டம் 2018 இற்கான விண்ணப்படிவங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி இரவு 9.30 வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இணையம் மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த சீட்டிழுப்பின் மூலம் எழுந்தமான முறையில் தெரிவாகுவோர் நேரடியாக அமெரிக்க வீசா நேர்முக தேர்வுக்கு...

Trail நடை பவனி: இன்று யாழில் இருந்து ஆரம்பம்

காலி ஹராபிட்டிய பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நடைபவனி இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்திதுறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடைபவனியை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்ககார, மகேல ஜேயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயட்சியாளர்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100 பேர் அளவில்...

தொடர்கிறது வரட்சி; வடக்கு,கிழக்கு உட்பட நாடு முழுவதும் 3 இலட்சம் பேர் பாதிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட ஸ்ரீலங்காவின் பல்வேறு பிரதேசங்களில் நிலவிவரும் வரட்சி காரணமாக மூன்று இலட்சத்து 10 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணம், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தொடர்ச்சியான வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள 78 ஆயிரம் குடும்பங்களில் அதிகளவானோர்...

வடக்கில் சிங்களவர்களை அச்சுறுத்தினால் தெற்கில் தமிழர்களுக்கும் அதேநிலை!!

வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை செய்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற...

கால்நடை தீவனத்தின் நிறையில் மோசடி!! பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்எச்சரிக்கை!!

கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப்...

பருத்தித்துறை வைத்தியசாலையை தொடர்புகொள்ள முடியவில்லை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொலைபேசி இணைப்புக்கள் பழுதடைந்துள்ளதால், வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளும் பொதுமக்களும் உள்ளகத்தில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த வைத்தியசாலையில் இரு வெளியக தொலைபேசி இணைப்புக்கள் உண்டு. இவற்றில் ஒரு இணைப்பு பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்கு ஒரேயொரு வெளியக இணைப்பு மாத்திரமே...

யாழ் பண்பாட்டுப்பெருவிழா

யாழ் பண்பாட்டுப்பெருவிழா சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை நடத்துகின்றன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், யாழ்...

இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று

தேசிய ஓய்வூதியத் தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனால் இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று வழங்குவதென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts