புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதியை சேகரிக்கும் மூன்றாம் நாள் பேரணி ஆரம்பம்

பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்டையின் தேவேந்திரமுனை வரையிலான நடை பவனி மூன்றாம் நாளாக இன்றைய தினம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி யாழ்ப்பாண கொடிகாமம்வரை சென்றடையவுள்ளது. கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. தேவேந்திரமுனை வரையிலான இந்த நடை...

ஓய்வுபெறுவதற்கு இன்று முதல் இணையம் மூலம் பதிவு செய்யலாம்

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார். ‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும். நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் இருப்பதாக...
Ad Widget

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்கும்: பிரதமர்

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை முன்னெக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார். விக்னேஷ்வரன் என்ன அறிவிப்புச் செய்திருந்தாலும் நாம் எமக்குத் தேவையான பிரகாரம் அரசியல் யாப்பை...

வடமாகாண பாதுகாப்பு உச்ச அளவில் உள்ளது; பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடமாகாணத்தின் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் உரியவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றில் சிறிதளவேனும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கோ அல்லது இனவாதிகளுக்கோ வழங்கப்படாது என்றும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க...

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்ய புதிய குழு!

வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர்கள் தொடர்பாக தபால் மூலமோ அல்லது நேரிலோ தெரிவிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக தனக்கு...

வடக்கு மாகாணத்தில் நீர்தாக்கிகள் அமைக்கும் பணி நிறைவுக்கட்டத்தில்!

வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள் முடியும் தறுவாயினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சு, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக பூநகரி, நாவற்குழி, கட்டுடை, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு பிரதேசங்களுக்கான நீர்த்தாங்கி அமைக்கும் நடவடிக்கை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நீர்த்தாங்கிகளின் கட்டுமானப்...

6ஆவது தடவையாகவும் தேசிய விருது பெறும் சுன்னாகம் நூலகம்!

ஆறாவது தடவையாகவும் யாழ். சுன்னாகம் பொது நூலகம் தேசிய விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. நேற்று...

வடக்குக் கிழக்கை இணைக்க அனுமதியேன், முஸ்லிம்கள் மத்தியில் மகிந்த!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பான கருத்துக்களை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தரப்புடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து...

யாழில் 13 மாடி இருதய சிகிச்சைப் பிரிவு!! சீனாவுடன் ஒப்பந்தம்!

யாழ்ப்பாணத்தில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....

அதிபர் நியமனத்தில் முறைகேடு : அதிபர்கள் போராட்டம்!!

வடக்கு மாகாணத்தில் அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தி பெற்ற ஒருதொகுதி அதிபர்களின் நியமனம் முறைகேடானது எனத் தெரிவித்து சித்தி பெற்றும் நியமனம் வழங்கப்படாத அதிபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் சித்திபெற்ற அதிபர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், போட்டிப்...

‘மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்’

இசைநிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் 'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' என்பதை நினைவிற் கொள்ளுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி...

இலங்கையில் எரிகற்கள்

எதிர்வரும் சில தினங்களில் இலங்கையில் எரிகற்கள் சிலவற்றை காணக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 21 , 22ம் திகதிகளிலும் நவம்பர் மாதம் 4ம் 5ம் 17ம் 18ம் திகதிகளிலும் டிசம்பர் மாதம் 13ம் 14ம் 21ம் 22ம் திகதிகளிலும் இந்த எரிகற்களைக் காணக்கூடியதாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை : வடமாகாண முதலமைச்சர்

சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு அரசாங்கத்தையும் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆயிரம் ரூபாசம்பள உயர்வும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 06 நாட்கள் தொழிலும் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்துமாறு கோரி தொடர்ந்தும் 12 நாட்களாக மலையக தோட்ட தொழிலாளர்கள்...

சுவிஸர்லாந்து கிறிஸ்டா மார்க் வெல்டருக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டருக்கும் – ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுவிஸர்லாந்தில் அரசியல் தஞசம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்த சுவிஸர்லாந்து அரசு தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு...

உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்!

கடல் உணவு சார்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை நடாத்தினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஐனாதிபதியிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரின் பிரதிநிதியிடம் கையளித்தனர். பின்னர் மீன்பிடி மற்றும் நீரியல்...

சிறுமியை தாக்கிய தாய்க்கு மீண்டும் விளக்கமறியல்

யாழ் நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை எதிர்வரும் 20ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால்...

இரண்டாவது நடைபவனியும் ஆரம்பம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகத்தினரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (07) காலை ஆரம்பமாகியது. காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டில் பருத்தித்துறையிலிருந்து தெற்கு நோக்கிய...

நாளை முதல் விவசாயிகள் வாரம்

உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு கூறியுள்ளது. கமநல அமைச்சு, மாகாண கமநல அமைச்சுக்கள், கமநல திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய...

க.பொ.த. உயர்தர செயற்பாட்டுப் பரீட்சைகள் 18 ஆம் திகதி ஆரம்பம்

க.பொ.த. உயர்தர பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சங்கீதம், நடனம் மற்றும் ஓவியம் போன்ற பாடங்களுக்கான செயற்பாட்டுப் பரீட்சை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலும், உயிரியல் வள தொழில்நுட்பத்துடன் தொடர்பான செயற்பாட்டுப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி...

வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது!

வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என நேற்று புதன்கிழமை நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அன்ரனி ஜெகநாதன் அவர்களின் மரணச்செய்தி அறிவதற்கு முதல் நாள் அவருடன் வெளிநாட்டு பயணங்கள் பற்றியும், முல்லைத்தீவிற்கு இரட்டைவழி ஒருங்கிணைப்பு...
Loading posts...

All posts loaded

No more posts