கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருத்திரபுரம், கோணாவில், ஊற்றுப்புலம், மற்றும் விநாயகர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாள்வெட்டிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தனிப்பட்ட பிரச்சினைகளே இந்த வாள்வெட்டு சம்பவங்களுக்கு காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.