Ad Widget

ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரூடாகவே விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டமை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக் கோருவதற்கும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கோருவதற்குமே சிறிலங்கா அதிபரைச் சந்திக்க மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏழு பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைப் புறக்கணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts