- Friday
- May 8th, 2026
யாழில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘எழுந்து நிற்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் ஜோன் பொஸ்கோ கல்லூரி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் யாழ்.மாநகரசபை...
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரே இலக்கங்களைக் கொண்ட இரு அடையாள அட்டைகளினால் இரண்டு யுவதிகளுக்கிடையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்ட, 877033473V என்ற இலக்கம் கொண்ட அடையாள அட்டையாலேயே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விருவரும் தமது அடையாள அட்டைகளை 10 வருடங்களாகப் பயன்படுத்தியுள்ள அதேநேரம், இருவரும்...
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் திகதி கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் கைச்சாத்திடவுள்ளதாக கிங்ஸ்டன் நகர சபையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன்...
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....
வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த போது, அவர் தங்கியிருந்த தாஜ் விடுதியில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா...
நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொதுமக்கள் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவை சேனாதிராஜாவை சமரரியாக கேள்வி கேட்கத்தொடங்கினர். ஆரம்பம் முதல் செய்தியாளர் கைத்தொலைபேசியில்...
தமிழக முதலமைச்சராக எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இருந்த வேளை ஈழத்தமிழ் மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு எங்களுக்குக் கூறினார். அதற்கிணங்க வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தோம் என இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்ற 'நண்பேண்டா' இசை நிகழ்ச்சியில்...
“இலங்கையில் இசைக் கல்லூரி ஒன்றை அமைத்து, இசையில் ஆர்வமுள்ளவர்களை அதில் பயிற்றுவித்து முன்னேற்றுவதற்கான வழிவகைகளைச் செய்வோம்” என்றும் “போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இலவச இசை நிகழ்வு நடத்த தயாராக உள்ளோம்” என யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தெரிவித்தனர். ஜெட்வின் ஹோட்டலில் நேற்று...
வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் மதுபானப் பாவனை அதிகரித்துள்ளது. கலாசார சீர்கேடுகளும், இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோநிலையும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கிறது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இருந்த...
வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமான பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம்...
தாயின் கவனயீன செயற்பாடு காரணமாக, பிறந்து 45 நாட்களான,சிவச்செல்வன் கேசவி என்ற பெண் சிசு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம், சனிக்கிழமை மாலை (08) நாவாலி தெற்கு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு பால் கொடுத்த தாய், ஏணையில் போட்டு விட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார். ஏணையில் போடப்பட்டிருந்த துணி, காற்று காரணமாக பிள்ளையின் முகத்தின்...
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இவர் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட மாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட...
யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் ஞானகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், சிறப்பு விருந்தினராக இந்து சமய கலாசார பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கௌரவ விருந்தினராக கு. ஜெயந்தன்,...
நாவற்குழி பகுதியில் சனிக்கிழமை (08) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான க.சந்திரசேனரன் (வயது 42) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பஸ்தர் வேலைக்குச் சென்று சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவரை வழிமறித்த சிலர் இந்த...
தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி..பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தை சனிக்கிழமை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் இருவரும் யாழ். நகரை சுற்றி பார்வையிட்டனர். இதன்போது பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம், 'இலங்கையில் எனக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர். அவர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி' என தெரிவித்தார். இன்று...
வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஆர்.பி.ஜி ரக குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். அலகல்ல, அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் சனிக்கிழமை (08) தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளை பாரிய குண்டுச்சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து, குறித்த பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (09) காலை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டதுடன், பொலிஸாருக்கு...
பொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்றுச் சனிக்கிழமை (08) அறிவித்துள்ளார். ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொது மக்கள் எண்ணினால், 0718592020 என்ற...
முதல் திருமணத்தை மறைத்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற யுவதியை திருமணம் செய்து, 45 இலட்சம் சீதனமும் வாங்கிய ஆசாமியும், பதிவுத்திருமணம் செய்து வைத்த பதிவாளரும் நேற்று பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். கைதான இருவரையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்பகுதியை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரும் யாழ் வாலிபரும்...
வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசனகுளமான வவுனிக்குளம் 2350 வருடங்கள் பழமையானது. எல்லாள மன்னனினால் கட்டப்பட்டதுதாக கூறப்படுகிறது. யுத்தம் காரணமாக கால்வாய்கள் உடைபெடுத்தநிலையில் காணப்பட்டதனால் இராணுவத்தின் 65 வது பிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் 1000 இராணுவம் வீரர்களைக் கொண்டும் பொதுமக்களின் ஒத்துழைப்புக் கொண்டும் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தின் கனரகவாகனங்களின்...
தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வுத்திட்டம் ஏற்படுத்தப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெறுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பின் தலைமை...
Loading posts...
All posts loaded
No more posts
