Ad Widget

ஆவா குழு தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை!!

ஆவா குழு தொடர்பில் எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

வன்னி கட்டளைத் தலைமையகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஆவா குழு தொடர்பில் வடக்கிற்கு வரும் சிங்களவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆவா குழு ஓர் கொள்கைக்குழு என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னரும் ஆவா குழு உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இரண்டாம் நிலைத் தலைவர் கொள்கைகளில் ஈடுபட்டு வருவதாக தென்படுகின்றது.

தெற்கிலிருந்து வடக்கு செல்லும் மக்கள் ஆவா குழு தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts