Ad Widget

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை, இந்திய மீனவர்கள் நால்வரைக் கைதுசெய்துள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டிணம் பகுதியிலிருந்து விசைப் படகொன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இந்த மீனவர்களை, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related Posts