Ad Widget

கிளிநொச்சியில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

கிளிநொச்சி பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து கடந்த 25 ஆம் திகதி வட மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை முன்பாக பொலிஸாருக்கும் பிரதேச இளைஞாகளுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசார் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே ஒருவர் கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் மாவட்ட நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்றயதினம் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts