Ad Widget

அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

15 சதவீத வற் வரி அதிகரிப்பு இன்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதற்கிணங்க ​​தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கின்றன.

80 பொருட்கள் மற்றும் சேவைகள் வற் அதிகரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அழைப்புக்கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவை உள்வாங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்களுக்கு அமுல்படுத்தப்படும் 15 சதவீத வற் வரி உள்ளடங்களாக அழைப்புக் கட்டணத்தில் 48 சதவீதம் வரியாக, பாவனையாளர்கள் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts