72 கிலோ கஞ்சா மீட்பு

கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இன்றுத் திங்கட்கிழமை (07) காலை மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார், இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னாள் போராளி குறித்து சம்பந்தனிடம் முறைப்பாடு

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...
Ad Widget

நல்லாட்சியிலும் புறக்கணிப்பா?

நல்லாட்சியிலும் தமது நியமனத்தினை வழங்காது புறக்கணிப்பதாக, யாழ் மாநகர சபையின் சுகாதார சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இன்று யாழ் மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். தமது நியமனத்தினை வழங்காது பாரபட்சம் காட்டுவதாகவும், அதற்கு உரிய தீர்வினை அரச அதிகாரிகள் வழங்குவதில் அசமந்த போக்கில் உள்ளதாகவும் சுகாதார சிற்றூழியர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச பணியாளர்களின் பணிநேரங்களில் மாற்றம்? தனியார்துறையிலும் மாற்றம்??

அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மையான வேலை நேரக்கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது.   முதற்கட்டமாக கொழும்பில் இந்த நெகிழ்வு தன்மையான வேலை நேர கொள்கை, அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆங்கில செய்தி தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   மேல்மாகாண பாரிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவை கோடிட்டு இந்த செய்தியை வெளியாகியுள்ளது.   இதன்படி அடுத்த மாதம் முதல்,...

கடனைச் செலுத்த முடியாவிட்டால் தற்கொலை செய்யுங்கள்!! நிதிநிறுவனமொன்று அச்சுறுத்தல்!

யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்களைக் குறித்த நிறுவனப் பணியாளர்கள் முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தடுத்து வைத்திருந்த சம்பவம் பொன்னாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இவற்றை விட ஒரு படிமேல் சென்று கடனைச் செலுத்த முடியாவிட்டால் தற்கொலை செய்யுங்கள் அப்படிச் செய்தால் கடனில்...

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் : டி.எம். சுவாமிநாதன்

கருணா , பத்மநாதன் போன்றோர் சுதந்திரமாக நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்று நாம் சிபார்சு செய்துள்ளோம் என்று மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இது குறித்து மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்....

ஆவா குழுவுடன் புலிகளுக்கும் தொடர்பில்லை இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஆவா குழுவானது விடுதலைப் புலிகளிடமிருந்தோ, இராணுவத்திலிருந்தோ அல்லது அரசியல் கட்சியிலிருந்தோ தோற்றம் பெற்ற ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கிலுள்ள அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் ஒரு குழுவே ஆவா குழுவென குறிப்பிட்டுள்ளார். பியகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு...

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச்சேர்ந்த 6பேர் கைது என காவல்துறையினர் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 6பேரைக் கைதுசெய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்குவில், சில்லாலை, சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் நேற்று முன்தினம் நான்குபேரும், உடுவிலில் இரண்டுபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் எனவும், அவர்களை வீட்டில் வைத்துக் கைதுசெய்ததுடன், அவர்களுக்குச் சொந்தமான கயஸ் வாகமொன்றையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வுப்...

பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகள்-சந்திரிகா

பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நடக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹாவில்நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே...

பெப்ரவரி முதல் ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

கடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக குறித்த ஓய்வூதியத்தை வழங்கவுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெரும் கால...

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு-சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று அக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை...

இவ்வருட முடிவுக்குள் கல்வி நிருவாக சேவைக்கு 852 பேர் நியமனம்- கல்வி அமைச்சு

இவ்வருடம் முடிவதற்கு முன்னர் கல்வி நிருவாக சேவைக்கு தகுதியான 852 பேரை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளிலிருந்து 219 பேரும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 515 பேரும், சிரேஷ்ட மற்றும் தகுதி அடிப்படையில் 118 பேரும் இவ்வாறு தெரிவு செய்யப்படவுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சையில்...

இராணுவமே எமது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது : வள்ளுவர்புர மக்கள்

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து தாம் இடம்பெயர்ந்த போது தங்களுடைய வீடுகள் நிலம் எவ்வாறு காணப்பட்டதோ அதே போன்று மீண்டும் வழங்கப்படவேண்டும் என வலிகாமம் வடக்கு தையிட்டி- வள்ளுவர் புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது காணிகளை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் மீண்டும் மக்களிடம் எவ்வாறான நிலையில் கையளிக்கின்றார்கள் என்பதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காணி உரிமையாளர்களுடன் நேரடியாக...

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த ஒரு தீர்வையும் ஏற்க போவதில்லை ; சம்பந்தன்

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேம் எமக்கு தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் ஒரு தீர்வில் காணப்பட்டால் அதனை தமிழர்கள் இழக்க கூ்டாது எனவும் குறிப்பிட்டார். காலைக்கதிர் நாளிதழின் பிரசுரமும் ஆரம்ப விழாவும் நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்...

பூட்டிய அறையிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (05) மீட்டுள்ளனர். பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இது தொடர்புடைய...

தொண்டமானறு கடலில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு

தொண்டமானாறு கடலில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை (05), சூரன் போர பார்ப்பதற்கு, மேற்படி சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள...

கஜன், சுலக்ஸன் வீட்டுக்குச் சென்றார் சம்பந்தன்

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களின் வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.

ஆவா குழு என்ற சந்தேகத்தில் யாழில் இருவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் போரில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் கைதுசெய்ததினால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்த வேளையில், வீட்டில்...

யாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம்

மறைந்து வரும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் ‘ஆயுசு 100′ விற்பனை நிலையத்தின் செயற்பாடு உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலாம் குறுக்குத்தெரு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளர் கே.றுசாங்கன், கடந்த...

கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள் பணம் கொள்ளை

கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு (04-11-2016) வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வெள்ளி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேல் உள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இச்சம்பவத்தின் போது ஜந்து பவுன் தங்க நகைகளான...
Loading posts...

All posts loaded

No more posts