யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவர்கள் ஒரு வாரகால உண்ணாவிரத போராட்டம்!

இலங்கையில் அமைக்கப்படவுள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மருத்துவ கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இதன்படி, யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 36 ஆவது அணி மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரகால...

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளன ஒன்றுகூடல்

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது. இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்...
Ad Widget

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்தில்...

எங்கட நிலத்தில் சிங்கள மக்கள் உல்லாசம், நாங்கள் அகதி முகாம்களில், கண்ணீருடன் ஊறணி மக்கள்!

வலி வடக்கு மக்கள் தமது சொந்த வீடுகளில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிப்பது கண்டு ஊறணி மக்கள் தமது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்தவாறு கண்ணீர் மல்க வெளியேறினர். நேற்று முன்தினம் முதல் ஊறணிப் பகுதியில் ஓர் இறங்குதுறையின் ஊடாக மீனவர்கள் கடலுக்குச் சென்றுவரும் வாய்பு வழங்கப்பட்டது. இதற்காக 2 ஏக்கர் நிலப்பரப்பும் படையினரின் பிடியில்...

40ஆயிரம் ஏக்கர் வயல்களைப் பாதுகாக்க 25 குழாய்க் கிணறுகளை அமைக்கத் திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகத்தில் செய்கைபண்ணப்பட்ட 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் அழிவை எதிர்கொள்ளும் 40 ஆயிரம் நெல்லை பாதுகாக்க நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் உடனடியாக 25 குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் சுமார் 20 ஆயிரம் நெல்லுக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதியினை ஏற்படுத்தக்கூடிய வாய்புக்கள்...

கடுமையான வரட்சி : A/C பாவனைக்கு சுற்றறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கிலும், மின்பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அரச அலுவலகங்களிலுள்ள (A/C) பாவனையை, குறைத்துக்கொள்ளுமாறு கோரி, சுற்றறிக்கையொன்றை வெளியிடப்படவுள்ளது. இந்தச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்கள், A/C யினை 26 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறும் குறிப்பிடப்படும் என்றும், எரிபொருள் மற்றும்...

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய ஒழுங்கு விதிகள் : வர்த்தமானி வெளியாகின

பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் விசேட ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன். கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் பற்றுசீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வலது பக்கத்தால் உள்நுழைய முடியாமல் முற்றாக அல்லது பகுதி அளவு...

வறட்சியான காலநிலை : 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலையினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 அயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர், திருகோணமலை, கண்டி, நுவரெலியா, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த வறட்சியான காலநிலையினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான...

தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளும் கிடைக்கின்றன! பிரதமர்

இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு கிடைக்கும் சகல சலுகைகளும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கின்றன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்- ”காணியுரிமை அற்றவர்களாக வாழ்ந்த மலையக மக்களுக்கு தற்பொது ஏழு...

ஓமந்தை இராணுவமுகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்!

வவுனியா மாவட்டம் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அண்மையிலிருந்து இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் தமது தேவைக்காக அமைத்துள்ள கட்டடங்களையும் அகற்றிவருகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச் சாவடியாகவும் இருந்த குறித்த பகுதி...

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டிலிருந்து வெளியேறவேண்டிய நிலமை ஏற்படும்

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் யோசனையை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது, அதிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சனைக்கு...

இரணைமடுவில் மழைவேண்டி குடைபிடித்து வழிபாடு!

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன்கோவிலில் மழைவேண்டி வழிபாடு நடாத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனா். நேற்று காலை இரணைமடு குளத்திலிருந்து குடைபிடித்து ஊர்வலமாகச் சென்று கனகாம்பிகை...

கப்பம் கோரி தமிழ் இளைஞனை கடத்தி காணாமல்போகச் செய்த கடற்படை அதிகாரி கைது!

கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞர் ஒருவரைக் கடத்தி காணாமல் போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடைபடை அதிகாரியொருவரைக் கைதுசெய்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞனே 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கப்பம்கோரப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்றையதினம் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் அனில் தம்மிகவை குற்றப் புலனாய்வுப்...

கிளிநொச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது!

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சி!

இலங்கையில் 40ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சி நிலவி வருவதுடன், அதை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சிறீலங்காவின் சராசரி மழைவீழ்ச்சியில் 70 வீத மழைவீழ்ச்சியே சிறீலங்காவுக்கு கிடைத்தது. இதனால் நீர்த்தேக்கங்கள் எதுவும் நிறையவில்லை. தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீரானது இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தமுடியும்....

அடுத்தடுத்த நாளில் இரண்டு மாணவர்களின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, ​ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமியறையிலிருந்து, 16 வயது சிறுவனின் சடலத்தை பொலிஸார மீட்டுள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் என்ற சிறுவனே, கடந்த வௌ்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், க.பொ.சா/த பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சிறுவனது நண்பன், அண்மையில் உயிரிழந்து விட்டதன் பின்னர், இந்தச் சிறுவன் வெகுநாட்களாக...

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும் : அமைச்சர் பா.டெனீஸ்வரன்

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என வடமாகாண போக்குவரத்து கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்ற பட்டப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசும் பொலிஸ் இல்லை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்...

சுவிஸ் பிரஜை சடலமாக மீட்பு

சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரவு படுக்கைக்கு சென்றவர் விடிந்து பலமணி நேரமாகியும் எழுந்திராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறி வித்துள்ளார். குறித்த விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது குறித்த நபர் உயிரிழந்து...

புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது

புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர், ஆனால் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என நாடளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே...
Loading posts...

All posts loaded

No more posts