தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை நேற்று காலை பொலிஸார் கைது செய்தனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய்....

முன்னாள் போராளிகளின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுவார்த்தை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘யுத்தத்திற்கு பின்னரான...
Ad Widget

சிரேஸ்ட வைத்திய அதிகாரிகளின் அடாவடி! பெண் வைத்தியர் தற்கொலை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியசாலை விடுதி 7 க்கு...

குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்

நிலவிவரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடி நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடி நீர் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை...

தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு...

வட மாகாண சபை கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை!

வட மாகாண சபை அதிக அதிகாரங்களை கேட்கின்றது ஆனாலும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேருந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத்...

தனியார் பேரூந்து ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளை, தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஏ9 வீதியை வழிமறித்து தனியார் பேரூந்து ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளை நிறுத்துவதற்கான தரிப்பிடம் புதிதாகக் திறந்து...

ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளுவதே எம்.ஜி.ஆரின் விருப்பம் ; சிவாஜிலிங்கம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் விரும்பியதை போன்று ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளும் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழகம் மற்றும் ஈழத்தின் இணைப்பு பாலமாக எம்.ஜி.ஆர். விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட...

தொழில் முயற்சியாளர்களுக்கான புதிய கடன் திட்டம்

சிறிய, மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டம் ஒன்றை இந்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்கள், இளம் பட்டதாரிகள், பெண்கள், விசேட தேவையுடைய நபர்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை...

58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

இலங்கைக்கு GPS+ வரிச்சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு மிகப்பாரதூரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியான செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அரசதகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நடைபெறும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாக இலங்கை ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை விரிவாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்...

ஒட்டுசுட்டானில் புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்கள் விவசாயிகளிடம் கையளிப்பு

ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.01.2017) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் துருசுக் கதவுகளின் சாவிகளைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்துள்ளார். ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள வெளிவயல் குளம் மற்றும் துவரமோட்டைக் குளம் ஆகிய இரண்டு...

பொருத்து வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம்! அங்கஜன்

பொருத்துவீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு நேற்றைய தினம் 11.30 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த...

காணாமல்போன கணவன், மனைவி! கட்டுண்டு மயங்கிய நிலையில் கணவர் மட்டும் மீட்பு

மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்ககள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற...

யாழ்ப்பாண மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் உலகவங்கி அதிகாரிகள் சந்திப்பு!

யுத்ததிற்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முக்கியமாக வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்தி திட்டங்கள் அரசினால் அதிகமாக முன்வைக்கப்படுகிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் உலகவங்கியினருடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சிவில் சமுக...

தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை மாற்ற கொக்கக்கோலா நிறுவனம் விருப்பம்!

தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற அமெரிக்காவின் மென்பான உற்பத்தி நிறுவனமான கொக்கக்கோலா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. கொக்கக்கோலா நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர் ஜோன் முர்பி, இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்து குறித்த விருப்பத்தினைத் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக்கொண்டுள்ள கொக்கக்கோலா நிறுவனம், சிறீலங்காவில் உற்பத்தி மையத்தை...

யாழில் ஐவருக்கு வாள்வெட்டு

ஆவரங்கால் - நவோதயா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும் ஆவரங்கால் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து வைப்பதற்கு பெரியோர்கள் எடுத்த முயற்சியின்போதே இந்த...

14 இராணுவத்தினரின் வழக்கு : நீதவான் அதிருப்தி

1998ஆம் ஆண்டு அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸாரால் மேற்கொண்டு வரும் வழக்கு விசாரணை, போதிய சாட்சிகள் இல்லாமையினால் இழுத்தடிப்பு செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார். மேலும், போதிய சாட்சிகள் இன்றி தடுத்து வைக்கப்படுவதும்...

கௌதம புத்தர் அவதரித்த இந்தியாவின் மாதிரி கிராமத்தை இலங்கையில் நிர்மாணிக நடவடிக்கை

கௌதம புத்தர் அவதரித்த இந்தியாவின் மாதிரி கிராமம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 2017ம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை கொண்டாடுவதுடன் தொடர்புபட்டதாகவும் உலக பௌத்த சம்மேளனத்தை ஒட்டியதாகவும் இந்த கிராமம் கெஸ்பாவவில் அமைக்கப்பட்வுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. கெஸ்பாவவில் 50 கோடி ரூபா செலவில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ...

ஊறணி பகுதியில் மீண்டும் மீன் பிடி நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 325 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த இலாணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஊரணி மீன்பிடி துறைமுகதை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படை தலைமையக படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது....

இலங்கைக்கு வறட்சி நிவாரணங்களை வழங்குவதில் ஜக்கிய நாடுகள் சபை ஆர்வம்

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சி நிலை குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ள ஜக்கிய நாடுகள் சபையும் அதன் துணை நிறுவனங்களும் வறட்சி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளன. ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ நா அபிவிருத்தித் திட்ட வதிவிட பிரதிநிதி, உலக உணவுத் திட்ட...
Loading posts...

All posts loaded

No more posts